செய்திகள் :

'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்: முதல்வர் அறிவிப்பு!

post image

'காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகிறபோது குறிப்பிட்டார், வெளிநாடு தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய இடங்களில் கண்காணிப்பு தேவை என்று பேசியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியக்கூடிய வெளிநாடு தொழிலாளர்கள் அனைவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் பேரவை உறுப்பினர் கோ.க. மணி கேட்டுக்கொண்டபடி, அவருடைய தொகுதியிலே தருமபுரி காவல் உட்கோட்டம், மதிகோன்பாளையம் காவல் வட்டத்தில் அமைந்துள்ள புலி கிராமத்தில் புதிய காவல் நிலையம் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசிய அத்தனை விவகாரங்களிலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இனியும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த அரசை பொறுத்தவரைக்கும் எந்தவித அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் நீதியை நிலை நாட்டுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க: வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தாயைக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை!

சென்னை குன்றத்தூர் அருகே தாயைக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.கடந்த 2017-ஆம் ஆண்டு போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பத... மேலும் பார்க்க

மதுரையில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளுக்குத் தடை

மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.மதுரையில் உள்ள பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை அனுமதின்றி எவ்வித ... மேலும் பார்க்க

மதுரை மழலையர் பள்ளியில் குழந்தை பலி; தாளாளர் உள்பட ஐந்து பேர் கைது

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது... மேலும் பார்க்க

2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆர். எஸ். பாரதி வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.கோடைக் கால... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

36 நாள்கள் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன்(ஏப். 29) நிறைவு பெற்றது.தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 1... மேலும் பார்க்க