செய்திகள் :

வரலாற்றுச் சிறப்புமிக்க சிரசுத் திருவிழா... மே 15 வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயிலின் `சிரசு’ திருவிழா, வரும் மே 15-ம் தேதி (வியாழக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் திருவிழாக்களில், இந்த சிரசுப் பெருவிழாவும் ஒன்று.

ஆண்டுதோறும் வைகாசி முதல் நாள் சிரசு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில், முக்கிய வீதிகளின் வழியாக மிதந்துவரும் அம்மனின் சிரசு கண்களுக்கு விருந்தளித்து மெய்சிலிர்க்க வைக்கும்.

சிரசுத் திருவிழா
சிரசுத் திருவிழா

ஊர்வலத்தைத் தொடர்ந்து, சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் குடியாத்தத்துக்கு இயக்கப்படும்.

இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திருவிழாவில் பொதுமக்களுடன் அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்துகொள்ள வசதியாக மே 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலாக, ஜூன் 14-ம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், ஜூன் 15-ம் தேதி அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஈச்சமலை மகாலட்சுமி கோயில்: சூலாயுத வடிவில் காட்சி தந்த லலிதாம்பிகை; அபிஷேகம் அலங்கார ஆராதனை

சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் சூலாயுத சிறப்பு அபிஷேகம் ... மேலும் பார்க்க

அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் அள்ளித் தரும் சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி திருக்கல்யாணம்; கலந்து கொள்ளுங்கள்!

அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் அள்ளித் தரும் சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி திருக்கல்யாணம். கலந்து கொள்ளுங்கள். 30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும... மேலும் பார்க்க

அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்; சங்கல்பியுங்கள்

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள்! உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்த... மேலும் பார்க்க

அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை: சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி கல்யாணத்தில் சங்கல்பம் செய்யுங்கள்!

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை நன்னாளில் இங்கு பிரமாண்ட சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த கல்யாண வைபத்தால் தடைப்பட்டிருந்த சகல சுப காரியங்களும் நடைபெறு... மேலும் பார்க்க

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடந்த விழாவில் குவிந்த பக்தர்கள்

வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்.தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழைமை வாய்ந்த திருத்தலமு... மேலும் பார்க்க

தென்காசி: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இடைக்கால தடை! என்ன நடந்தது?

தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு குலசேகர பாண்டியனா... மேலும் பார்க்க