செய்திகள் :

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடந்த விழாவில் குவிந்த பக்தர்கள்

post image

வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்.

தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழைமை வாய்ந்த திருத்தலமுமான காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கொடிமரம், சுற்று மண்டபம், வண்ணப்பூச்சு, கல் மண்டபம், பிரசாத ஸ்டால்கள், திருக்கோவில் பணிகள் உள்பட பல்வேறு திருப்பணிகள் கோயிலில் மேற்கொள்ளப்பட்டன.

கும்பாபிஷேகம்

கடந்த 3-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது.

9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தயார் நிலையில்
பக்தர்கள்

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை: சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி கல்யாணத்தில் சங்கல்பம் செய்யுங்கள்!

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை நன்னாளில் இங்கு பிரமாண்ட சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த கல்யாண வைபத்தால் தடைப்பட்டிருந்த சகல சுப காரியங்களும் நடைபெறு... மேலும் பார்க்க

தென்காசி: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இடைக்கால தடை! என்ன நடந்தது?

தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு குலசேகர பாண்டியனா... மேலும் பார்க்க

பாம்புக் கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் கோயில் - 11 கிராம மக்களின் நம்பிக்கை என்ன?

உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஜதௌடா பாண்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம், சுற்றியுள்ள 12 கிராம மக்களை பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பதாக கூறுகின்றனர். பல நூற்றாண்டுகள... மேலும் பார்க்க

உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப்... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

சனி பரிகாரக் கோயில்கள்: `துன்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்' - திருநள்ளாறுக்கு இணையான 5 இடங்கள்

திருவாதவூர் திருமறை நாதர்திருவாதவூர் சனிப்பெயர்ச்சி 2025 சிம்மம் : புதியவர்களிடம் கவனம்; ஆரோக்கியத்தில் அக்கறை - என்ன பலன்கள் உங்களுக்கு?மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்... மேலும் பார்க்க