செய்திகள் :

DNA: "பரியேறும் பெருமாள் கதையை முதல்ல அதர்வாகிட்ட சொன்னேன்; அப்போ ஃபீல் பண்ணேன்" - மாரி செல்வராஜ்

post image

அதர்வா நடித்திருக்கும் 'DNA' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதர்வாவுடன் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார்.

DNA திரைப்படத்தில்...
DNA திரைப்படத்தில்...

இந்தப் படத்திற்கு மொத்தமாக ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மாரி செல்வராஜ் பேசுகையில், "நான் முதன் முதலில் 'பரியேறும் பெருமாள்' கதையை அதர்வா ப்ரோவிடம்தான் சொன்னேன்.

அவருக்கு அது நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு முரளி சாரை மிகவும் பிடிக்கும். முரளி சாருடைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், 'பானா காத்தாடி' படத்தைப் பார்த்து, 'பரியேறும் பெருமாள்' கதைக்குள் அவரைப் பொருத்திப் பார்த்தேன்.

முரளி சாருடைய மகன் நம்மைப் போலவே இருப்பார், அவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்து வைத்திருந்தேன்.

நான் கதை சொன்ன சமயத்தில் அவருடைய தேதிகள் கிடைக்கவில்லை. முரளி சாருடைய மகன் 'பரியேறும் பெருமாள்' கதையைச் செய்யவில்லை என்று அப்போது வருத்தப்பட்டேன்.

அதர்வா என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்ளவில்லை, வேறு யார் என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன்.

அவரைப் பார்க்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதர்வா ப்ரோவை நெருக்கமாகச் சந்திக்கிறேன்.

இன்னும் பல உயரங்களுக்குச் செல்லக்கூடிய ஆற்றல் அதர்வா ப்ரோவிடம் இருக்கிறது. இந்த 'DNA' படம் அவருக்கு முக்கியமான ஒரு படமாக இருக்கும்.

இயல்பான மனிதராகத் தோன்றக்கூடிய தோற்றம் நிமிஷாவிடம் இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நிமிஷா சஜயன் மாதிரியான ஒரு பெண் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நான் என்னுடைய உதவி இயக்குநர்களிடம் சொல்வேன்.

என்னுடைய மனைவி, 'படங்களில் அரசியல் பேசு. ஆனால், வெளியில் அரசியல்வாதியைப் போலப் பேசிவிடாதே.

அப்படி ஆகிவிட்டால் உன்னுடைய படங்களில் இருக்கக்கூடிய படைப்பாற்றல் போய்விடும்' என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அரசியல்வாதியாக இருந்துகொண்டே 10 படங்கள் தயாரித்திருக்கிறார்" என்றார்.

Vinveli Nayaga: "எத்தனை மகள்களால் தங்கள் தந்தைக்காக இப்படிப் பாட முடியும்" - நெகிழும் ஷ்ருதி ஹாசன்

கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி, கடந்த ஜூன் 5-ம் தேதி 'தக் லைஃப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகிய இப்படத்தின் அத்தனை பாடல்களும் பலரின் மனதிலு... மேலும் பார்க்க

Parandhu Po: "என்னுடைய எல்லா படைப்புகளிலும் இயக்குநர் ராம் இருப்பார்" - சித்தார்த் நெகிழ்ச்சி

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க

Parandhu Po: "என் மேல் ராம் சார் அன்பு வச்சிருக்கார்னு நினைச்சேன்; ஆனா..." - மிர்ச்சி சிவா

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க

Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு..." - இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பறந்து போ'.இந்தப் படம் வருகிற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இ... மேலும் பார்க்க

Ravi Mohan Line Up: யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்; தயாரிப்பாளராக முதல் படம்- ஃபயர் மோடில் ரவி மோகன்

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஃபயர் மோடில் பரபரப்பாக இயங்கி வருகிறார் ரவி மோகன். புத்துணர்ச்சியுடன் இந்தப் புதிய வருடத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என்று... மேலும் பார்க்க