செய்திகள் :

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

post image

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்... குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்... பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா... சைவ உணவுக்காரர்கள் கால்சியம் தேவைக்கு பாலையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.

ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்

பாலில் புரதம், கால்சியம் உண்டு என்றாலும் அதை எல்லோருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்க முடியாது.  பால் மற்றும் பால் பொருள்கள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை சற்று அதிகரிக்கும் என்பது உண்மைதான்.

சமீப காலமாக நிறைய பேருக்கு பால் அலர்ஜி ஏற்படுவதைப் பார்க்கிறோம். 'லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' (Lactose intolerance) எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

தனக்கு அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு பிரச்னைகள்தான் தொடரும். அதேபோல எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே நாங்கள் அறிவுறுத்துவோம்.

முகத்தில் பருக்கள் வரும் தன்மை கொண்டவர்களுக்கும் பாலைத் தவிர்க்கச் சொல்வோம்.  பால் எடுத்துக்கொள்வது, சிலருக்கு பருக்களின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.

செரிமான கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே அறிவுறுத்துவோம். ஆனாலும், இந்த அறிவுரை எல்லோருக்குமான பொதுவிஷயமாக அணுகப்படக்கூடாது.

'லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

அவரவர் உடல்நிலை, தேவை, உடல்எடை போன்றவற்றைப் பொறுத்து இது மாறலாம். ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பால், அதாவது 150 மில்லி அளவுக்குக் குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம்.  பாலாக எடுத்துக்கொள்ளாமல் தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பாலில் மட்டும்தான் கால்சியம் உள்ளது என நினைக்க வேண்டாம். கேழ்வரகு, பசலைக்கீரை என எத்தனையோ உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது. ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரைக் கலந்தாலோசித்து அத்தகைய உணவுகளைச் சேர்த்துக்கொண்டாலே கால்சியம் தேவை ஈடுகட்டப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

``தீவிரவாதிகள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?'' - பாகிஸ்தானியர்கள் கேள்வி

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ந... மேலும் பார்க்க

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா; காவல்துறைக்கு புதிய அறிவிப்புகள்!

தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஏப்ரல் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு... மேலும் பார்க்க

Canada: தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரூடோவின் கட்சி; ஆட்சிக்கு வரும் கார்னி! - காத்திருக்கும் சாவல்கள்

நாடு முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் கிளம்ப...2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, தனது கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2015-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றப் போது, இவர் த... மேலும் பார்க்க

``இணைப்பு சாலை இல்லாத பாலம்.. போராடி வாங்கியும் தினமும் திண்டாட்டம் தான்..'' - குமுறும் மக்கள்

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி மற்றும் அதை சுற்றி பல கிராமங்களில் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2007 காலகட்டத்தில், இந்த பகுதியில் ரயில்வே பாலத்துக்கு கீழே ஒரு நபர் மட்டும் சென்று வரும... மேலும் பார்க்க

``அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்'' - பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

'இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் வந்துவிடுமா?' - ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, உலகம் முழுக்க இருக்கும் பரபர கேள்வி இது.'தக்க நடவடிக்கைகள் எடுப்போம்' என்று இந்தியா அடுத்தடுத... மேலும் பார்க்க