செய்திகள் :

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் இனிப்புக்கு ஸ்டீவ்யா பொடியை சேர்க்கலாமா? பாதிப்புகள் வராதா?

post image

Doctor Vikatan: சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா(Stevia)   பவுடர் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார்களே... அது என்ன... அதைச் சேர்த்துக்கொண்டால் சர்க்கரையால் வரும் பாதிப்புகள் வராதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

ஸ்டீவ்யா என்பது ஒருவகை தாவரத்திலிருந்து பெறப்படும் இனிப்புச்சுவை. அதாவது சர்க்கரைத்துளசி அல்லது சீனித்துளசி எனப்படும் செடியிலிருந்து பெறப்படும் இது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்கள், அதே சமயம், இனிப்பையும் விட முடியாத நிலையில், சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா பொடியை எடுத்துக்கொள்ளலாம்.  

ஸ்டீவ்யா என்பது சர்க்கரையைவிட பல மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. எனவே, மிகக் குறைந்த அளவு பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். 

ஸ்டீவ்யா பரிந்துரைக்கப்படுவதன் நோக்கமே, சர்க்கரைச் சத்திலிருந்து வெளியே வருவதற்காகத்தான். இதை எடுத்துக்கொள்வதால் பெரிய பாதிப்புகள் வராது. கெமிக்கல் சேர்த்துத் தயாரிக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகளைச் சேர்த்துக்கொள்வதால்தான் கிட்னி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இனிப்புக்கு மாற்றாக ஸ்டீவ்யா எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சர்க்கரையை அறவே தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படும். அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நாள்களில் ஸ்டீவ்யா பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், அவர்களும் இதை நாள்கணக்கில், மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

Diabetic

சர்க்கரை நோயாளிகள் எந்த வித இனிப்பையும் அறவே தவிர்ப்பதுதான் ஆரோக்கியமானது. எனவே, ஆரம்ப நாள்களில் இனிப்பற்ற உணவுகளுக்குப் பழகும்வரை ஸ்டீவ்யா எடுத்துக் கொண்டாலும், படிப்படியாக இனிப்பிலிருந்து முழுமையாக வெளியே வருவதுதான் அவர்களுக்கான அட்வைஸ்.

ஒரு டீஸ்பூன் சர்க்கரை எடுத்துப் பழகியவர்கள், அதை அரை டீஸ்பூனாக குறைக்கலாம். பிறகு அதை கால் டீஸ்பூனாக குறைக்கலாம். அடுத்து முழுமையாகத் தவிர்த்து விடலாம். இப்படித்தான் அவர்கள் சர்க்கரையை விட்டு வெளியே வர முடியும். அப்படிப் பழகுவதுதான் அவர்கள் உடல்நலத்துக்கு நல்லது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      

``காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது என் தவறுதான்'' - ராகுல் காந்தி சொல்வதென்ன?

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தனது தவறுதான் என்றும் கட்சியின் தவறில்லை என்றும் கூறியுளார். மேலும், தற்போது சாதிவாரி கணக்க... மேலும் பார்க்க

Thailand vs Cambodia: இந்து கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதுதான் மோதலுக்கு காரணமா? | Explained

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள மோதலால் தென் கிழக்கு ஆசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்னைகள் திடீரென மோதலாக வெடித்திருக்கிறத... மேலும் பார்க்க

``கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. மதுரைக்கு அவப்பெயரை தந்துள்ளது திமுக அரசு..'' - அதிமுக டாக்டர் சரவணன்

தமிழ்நாட்டின் கலை, கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2023 (Swachh Survekshan 2023) தூய்மைப் பட்டியல... மேலும் பார்க்க

Ear Health: காதில் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்.. - விளக்கும் ENT சிறப்பு மருத்துவர்

ஐம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல... நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந... மேலும் பார்க்க

Modi தரும் நெருக்கடி, நிம்மதியிழக்கும் Edapadi? என்னதான் ஆச்சு அதிமுகவுக்கு? | Elangovan Explains

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். கூட்டணி, ஆட்சியில் பங்கு என பாஜக தரும் நெருக்கடி, மாறாக விஜய்,சீமானுக்கு அழைப்பு கொடுப்பது என சில ஆட்டத்தை ஆட... மேலும் பார்க்க

Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்ன சொல்கிறார்?

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்ச... மேலும் பார்க்க