செய்திகள் :

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கெட்ட வாடை.. மருத்துவ சிகிச்சை தேவையா?

post image

Doctor Vikatan: என்னால் சிறிய அளவிலான துர்நாற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை. எப்போதும் என்னைச் சுற்றி ஏதேனும் நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். வீட்டினுள் ரூம் ஸ்பிரே, ஊதுவத்தி, சாம்பிராணி என ஏதோ ஒரு நறுமணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால் லேசான கெட்ட வாடை கூட என்னை அதிகபட்ச ஸட்ரெஸ்ஸுக்குள் தள்ளுகிறது. இது இ.என்.டி தொடர்பான பிரச்னையா அல்லது  வேறு ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்

மருத்துவர் பி.நட்ராஜ்

துர்நாற்றத்தால் சங்கடம் ஏற்படுவது என்பது இயற்கையான ஓர் உணர்வுதான். உண்மையில்  அது ஒருவித  தற்காப்பு நடவடிக்கை (defence mechanism) என்றே சொல்லலாம். இந்த உணர்வின் மூலம் கெட்டுப்போன உணவு வகைகளைக் கண்டறிவது போன்ற பல பயன்கள் உண்டு.

சாதாரண மணம் அல்லது லேசான துர்நாற்றம்கூட சிலருக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தலாம். சில சமயம் சாதாரண உணவு வாசனைகூட குமட்டலை ஏற்படுத்திய அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன்  மாற்றங்களால்கூட இது நிகழலாம். உதாரணத்துக்கு, கர்ப்ப காலத்தைச் சொல்லலாம். கர்ப்ப காலத்தில், சிலருக்கு பழகிய வாசனைகூட பிடிக்காமல் போவதையும், குமட்டல் உணர்வை ஏற்படுத்துவதையும் பார்க்கலாம்.

அதே போல சர்க்கரை நோய், ஊட்டச்சத்து குறைபாடு, சிலவகை நரம்பியல் நோய்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இவையெல்லாம் மிக அரிதானவையே.

கர்ப்ப காலத்தில், சிலருக்கு பழகிய வாசனைகூட பிடிக்காமல் போவதையும், குமட்டல் உணர்வை ஏற்படுத்துவதையும் பார்க்கலாம்.

கோவிட் நோய் தாக்குதலின் அறிகுறியாக  வாசனை அறியும் திறன் இல்லாமல் போவது என்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். வாசனை அறியும் திறன் இல்லாமல் போனதைப் போலவே இந்த அதிக வாசனை சென்சிட்டிவிட்டியும் சில பேருக்கு இருப்பதை மருத்துவர்கள் பார்த்தோம். 

இந்தப் பிரச்னை  தற்காலிகமாக இருந்தால் அது தானாகவே நீங்கிவிடும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை நாள்பட இருந்தால் காது-மூக்கு-தொண்டை மருத்துவர் அல்லது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

``உணவின் மூலமே உங்கள் கல்லீரலை நலமாக வைத்திருக்கலாம்!'' - விளக்கும் மருத்துவர் | World Liver Day

உங்கள் உடலுக்குள் இருக்கிற ஓர் உற்ற தோழமை யார் தெரியுமா? கல்லீரல் என்கிற லிவர் தான் அது. இதயம், மூளை, நுரையீரல் போலவே நம் உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. நாம் சாப்பிடும் உணவுகளை செரிக்க பித்த நீரை ... மேலும் பார்க்க

`தெர்மாகோல், பிளாஸ்டிக் இல்லை..' மாற்றி யோசித்த பள்ளி; அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளி தான் பாரதியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, இந்த பள்ளியில் கடந்த மார்ச் 29 -ல் "manifest" என்கிற பெயரில் அறிவியல் கண்கா... மேலும் பார்க்க

``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது.'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதை ஒருவழியாக சீனா ஏற்றுக்கொண்டது.நேற்று, சீனாவின் வர்த்தக அமைச்சகம்,... மேலும் பார்க்க

``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு'' - கரூரில் விசிக ஒட்டிய பரபர போஸ்டர்; நிர்வாகிகள் சொல்வதென்ன?

நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு' என்பதை கொள்கையாக அறிவித்த நிலையில், அந்த பாயிண்டை வைத்து, 'எங்களுக்கும் பங்கு வேண்டும்' என்று பிரதான அரசியல் கட்சிகளோடு... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொளுத்தும் வெயில், அம்மை நோய் பாதிப்பு வராமல் தடுக்க என்ன வழி?

Doctor Vikatan: அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என பலரின் வீடுகளிலும்யாரோ ஒருவருக்கு அம்மை பாதித்திருப்பதைக்கேள்விப்படுகிறோம். அம்மை நோய் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக ஏதேனும் செய்ய முடியுமா?பதில... மேலும் பார்க்க

``விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம்'' - இந்திய முஸ்லிம் ஜமாத் அறிவிப்பு; காரணம் என்ன?

தவெக தலைவர் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி தெரிவித்திரு... மேலும் பார்க்க