செய்திகள் :

ED: யுவராஜ் சிங், உத்தப்பா முதல் நடிகை ஊர்வசி வரை... சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! - பின்னணி என்ன?

post image

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நாடுமுழுவதும் முடுக்கிவிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு விசாரணை சம்மன் அனுப்பியிருக்கிறது.

1xBet, Junglee Rummy, JeetWin, Lotus365 போன்ற பல ஆன்லைன் சூதாட்ட செயலிகள் திறன் அடிப்படையிலான விளையாட்டு என விளம்பரம் செய்து சூதாட்ட நிறுவனங்களை இயக்கி வருவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.

யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட் உள்ளிட்டோருக்கு சம்மன்!

ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பா

இந்தியச் சட்டங்களின்படி இது சட்டவிரோதமானது. பல கோடி மோசடி நடந்திருப்பதும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

அதனால், இந்த செயலிகளுக்கான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, நடிகை ஊர்வசி ரௌதெலா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

அதைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

இந்த விசாரணையில், விளம்பரத்துக்காக அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது, அவர்களின் பங்கு என்ன என்பது குறித்துக் கேள்வி கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

குன்னூர்: மலைச்சரிவில் சிசுவுடன் பரிதாபமாக இறந்து கிடந்த கர்ப்பிணி யானை! - என்ன சொல்கிறது வனத்துறை?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் முதல் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்... மேலும் பார்க்க

6 மாத கண்காணிப்பு; சிக்கிய அஸ்ஸாம் பெண் அதிகாரி: ரெய்டில் ரூ.2 கோடி தங்கம், பணம் பறிமுதல்!

அஸ்ஸாம் சிவில் சர்வீஸ் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் நுபுர் போரா. தற்போது சர்க்கிள் அதிகாரியாக இருக்கும் நுபுர் போரா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `தந்தையுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்தேன்'- போலீஸாரையே அதிரவைத்த இளஞ்சிறார்!

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள திரேஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருகிறார். ராமசுப்புவின் மனைவி சக்தி மகேஸ்வரி இவர்களுக்கு இரண்டு ... மேலும் பார்க்க

சென்னை: பெண் தொழிலதிபரிடம் ரூ.10.89 கோடி மோசடி - தம்பதி, வழக்கறிஞர் கைது!

சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 11.06.2025-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரக... மேலும் பார்க்க

`அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ... மேலும் பார்க்க

BMW கார் விபத்து வழக்கில் கைதான பெண், திகார் சிறையில் அடைப்பு; நடந்தது விபத்தா, கொலையா!?

தலைநகர் டெல்லியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த நவ்ஜோத் சிங் (வயது 52) என்ற அதிகாரி பலியான சம்பவம் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. இந்த விபத்... மேலும் பார்க்க