செய்திகள் :

Himanshu Sangwan: `கோலி விக்கெட் எடுக்க ஐடியா கொடுத்த பஸ் டிரைவர்' - சுவாரஸ்யம் பகிர்ந்த ஹிமான்ஷு

post image

ரஞ்சி டிராபியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலியை, வெறும் 6 ரன்களில் ஆஃப் ஸ்டம்ப் பறக்க கிளீன் போல்டாக்கி ஒரேநாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஹிமான்ஷு சங்வான். அந்தப் போட்டி முடிந்த பிறகு, ஹிமான்ஷு சங்வான் கோலியைச் சந்தித்து பந்தில் ஆட்டோகிராஃப் வாங்கியபோது, ``உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பந்துவீச்சாளர் நீங்கள். உங்களின் எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்." என்று கோலி வாழ்த்தியிருந்தார்.

ஹிமான்ஷு சங்வான் - விராட் கோலி

இந்த நிலையில், கோலியை போல்டாக்கிய டெலிவரி குறித்த சுவாரஸ்யத்தை ஹிமான்ஷு சங்வான் பகிர்ந்திருக்கிறார். தனியார் ஊடகத்துடன் பேசிய ஹிமான்ஷு சங்வான், ``விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடப் போவதாக போட்டிக்கு முன் பேச்சுக்கள் அடிபட்டது. அப்போது, இந்தப் போட்டி நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாது. பின்னர், பண்ட் விளையாடப்போவதில்லை, கோலி களமிறங்கப்போகிறார், போட்டியும் நேரலை செய்யப்படும் என்பது மெதுவாகத் தெரியவந்தது.

ரயில்வேஸ் அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டை நான் முன்னெடுத்துச் செல்வதால், `கோலியின் விக்கெட்டை நீங்கள் எடுப்பீர்கள்.' என அணியிலிருந்த ஒவ்வொருவரும் கூறினார்கள். நாங்கள் பயணித்த பேருந்தின் டிரைவர், `நீங்கள் விராட் கோலிக்கு நான்காவது, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்து வீசினால் அவர் அவுட்டாகிவிடுவார்.' என்று என்னிடம் கூறினார்.

ஹிமான்ஷு சங்வான்

எனக்கும் தன்னம்பிக்கை இருந்தது. மற்றவர்களின் பலவீனங்களை விட எனது சொந்த பலத்தில் கவனம் செலுத்த விரும்பினேன். அதன்படி, எனது பலத்துக்கு ஏற்றவாறு பந்துவீசி விக்கெட்டையும் எடுத்தேன். கோலிக்கென்று தனியான பிளான் வைத்திருக்கவில்லை. டெல்லி வீரர்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் என்றும், அதனால் நல்ல லைனில் பந்து வீசுமாறும் பயிற்சியாளர்கள் கூறினர்.

கோலி விக்கெட்

இன்னிங்ஸ் முடிந்ததும், டிரஸ்ஸிங் ரூமுக்கு நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது, கோலி என்னிடம் கைகுலுக்கி, 'மிக நன்றாகப் பந்துவீசினாய்' என்றார். பின்னர், மதிய உணவு இடைவேளையின்போது தங்களுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று அவரிடம் கூறினேன். அதைத்தொடர்ந்து, அவரின் விக்கெட்டை எடுத்த அதே பந்தை எடுத்துக்கொண்டு டெல்லி அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றேன். அவரும், `அதே பந்துதானே' என்று ஜாலியாகக் கேட்டார்." என்று கூறினார்.

Babar Azam: "தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன?

ஒருநாள் போட்டி தரவரிசையில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர், பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது.இதில், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தத... மேலும் பார்க்க

Rishabh Pant : அன்று ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்... இன்று உயிருக்குப் போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருந்தார். அப்போது... மேலும் பார்க்க

Virat Kohli: `நானும் வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம்' - கேப்டன் ரஜத் பட்டிதரை வாழ்த்திய கோலி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு விராட் கோலி நெகிழ்வுடன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.Rajat Patidarஇதுகுறித்து விராட் கோலி பேசுகையில், ``ரஜத் பட... மேலும் பார்க்க

RCB : `உலகின் சிறந்த ரசிகர்களுக்காக...' - புதிய கேப்டனை அறிவித்த ஆர்.சி.பி

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.பெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் ... மேலும் பார்க்க

RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.Virat Kohliபெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப... மேலும் பார்க்க

MS Dhoni: ``தோனியின் கண்களை பார்த்தால்..." -முன்னாள் வீரர் தவான் பகிரும் சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் - சேவாக் ஓப்பனிங் கூட்டணிக்குப் பிறகு, வெற்றிகரமான ஓப்பனிங் கூட்டணியாக அமைந்தது ரோஹித் - ஷிகர் தவான் கூட்டணிதான். இதில், 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டி மூலம் ட... மேலும் பார்க்க