செய்திகள் :

kanguva: கொண்டாடிய தெலுங்கு ரசிகர்கள்; `கண்கள் கலங்கி நிற்கிறேன்..' - சூர்யா நெகிழ்ச்சி

post image
சூர்யா நடிப்பில் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நவம்பர் 14ம் தேதி வெளியாகவிருக்கிறது 'கங்குவா' திரைப்படம்.

அதிரடி வராலாற்று காலத்து கதையில் கட்டுக்கடங்காத சூர்யா, இந்த காலத்திற்கேற்ப துறுதுறு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் மற்றொரு சூர்யா என நீண்ட நாள் சூர்யா படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா வாக வந்திருக்கிறது 'கங்குவா'. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, இதற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாகியுள்ளனர். அவ்வகையில் நேற்று (அக்டோபர் 24) ஹைதராபாத்தின் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் சூர்யா, இயக்குநர் 'சிறுத்தை சிவா' உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

சூர்யா, கார்த்தி இருவருக்குமே தெலுங்கு ரசிகர்கள் அங்கு அதிகம். கார்த்தியின் 'ஆயிரத்தில் ஒருவன்', சூர்யாவின் 'சூர்யா s/o கிருஷ்ணன் (வாரணம் ஆயிரம்)' திரைப்படம் தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள். அதனால், சூர்யா, கார்த்தி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எப்போதும் இருக்கும். அந்த வகையில் நேற்றும் கங்குவா செய்தியாளர் சந்திப்பில் ஏராளமான ரசிகர்கள் சூர்யாவைக் காண நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். சூர்யாவின் வசனங்கள், பாடல்களைப் பாடி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

சூர்யா

தெலுங்கு ரசிகர்களின் இந்த வரவேற்பையும், அன்பையும் கண்டு கண்கலங்கி நெகிழ்ச்சியுடன், 'நா இரத்தமும் மி இரத்தமும் வேறுவேறா (என் இரத்தமும் உங்கள் இரத்தமும் வெவ்வேறா' என 'கங்குவா' வசனத்தை ரசிகர்களுக்கு சமர்பித்து பேச ஆரம்பித்த சூர்யா, "எனக்கான நீங்கள் எப்போதும் பெரும் அன்பை அள்ளிக் கொடுக்கிறீர்கள். அதற்கெல்லாம் என் மிகப்பெரிய நன்றிகள். என் படத்தைப் பற்றி நீங்கள் கொண்டாடி பேசியது, வசனம், பாடல்களைப் பாடியதை நான் கேட்டு மனம் நெகிழ்ந்துபோனேன்.

எனக்குத் தெலுங்கில் கொஞ்ச நாள்களாகப் பெரிதாக எந்தப் படமும் வரதாத போதும் 'சூர்யா s/o கிருஷ்ணன் (வாரணம் ஆயிரம்)' படத்தைக் கொண்டாடினீர்கள். உங்களின் இந்த அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது. உண்மையில் இப்போது மிகவும் உணர்ச்சி வசத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களின் அன்பால் என் கண்களில் கண்ணீர் துளி நிறைந்து கண்கள் கலங்கி நிற்கிறேன். நமக்கிடையே நிச்சயம் ஏதோவொரு இரத்தம் சொந்தம் இருப்பதாகவே உணர்கிறேன்.

சூர்யா

'கங்குவா' திரைப்படம் திரையில் வரவிருக்கிறது. இரண்டரை ஆண்டுகால உழைப்பு இது. இதுவரை நீங்கள் பார்த்திடாத ஒரு திரை அனுபவத்தை இப்படம் உங்களுக்குக் கொடுக்கும். இது ஒரு இந்தியத் திரைப்படம். ஒரு போர்வீரனின் கதை இது. மக்களுக்காக, குடும்பத்திற்காக நிற்கும் ஒவ்வொருவரும் ஒரு போர் வீரர் தான். நீங்கள் அனைவரும் போர் வீரர்கள்தான்." என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

பாலய்யா வஸ்தாவய்யா 4 : `ஆட்டமு தேரோட்டமு' - பிறந்த நாளுக்குக் குவிந்த கூட்டம்; சாட்டை எடுத்த பாலய்யா

ஒரு 'பாலய்யாஜோக்' ஆந்திரா பக்கம் காலேஜ் அளவில் பாப்புலர்.*"ஒருவேளை பாலய்யா இப்ப பிறக்காம 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"**"இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளைக்காரங்க நம்மக்கி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 3: ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா? - போலீஸையே சுற்றலில் விட்ட பாலய்யா

அது ஒரு ஏப்ரல் மாதத்தின் உச்சந்தலையில் உளி வைத்து அடிக்கும் வெயில் பொழுது...ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பாலய்யாவின் வீடு பரபரப்பில் இருந்தது. காவல்துறை வாகனங்களும், அவரது தனியார் பாதுக... மேலும் பார்க்க

Allu Arjun: 1600 கி.மீ சைக்கிள் பயணம்; அல்லு அர்ஜுனைக் காண வந்த உ.பி ரசிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.இவரது நடிப்பில் வெளியான 'புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 2: `சூரியனுக்கு முன் உணவு' -MGR பெரியப்பா, சிவாஜி சித்தப்பா - சென்னையில் விருந்து

வணக்கம் மக்களே... 'பாலய்யா வஸ்தாவய்யா' தொடருக்குக் கலவையான கமென்ட்டுகளும் ரகளையான ரியாக்‌ஷன்களுமாய் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.பலர், "செம சூப்பரு...ஃபுல் ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடு தல!" என்று வாழ்த... மேலும் பார்க்க

Devara Review: பக்கா ஆந்திரா மீல்ஸ் உந்தி சார்... கானி காரம், சால்ட் மாத்ரம் லேது சார்!

செங்கடல் என்றொரு கடல். அதன் அருகில் நான்கு மலை கிராமங்கள் இருக்கின்றன.அந்த நான்கு கிராமங்களுக்கு ஒவ்வொரு தலைவர்கள். தேவரா (ஜூனியர் என்.டி.ஆர்), பைரா (சயீஃப் அலி கான்), குஞ்சாரா - கோரா (கலையரசன், சைன் ... மேலும் பார்க்க