செய்திகள் :

Kerala: எம்.எஸ்.சி எல்சா-3 கப்பல் விபத்து - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போர்ட் கொச்சி போலீஸ்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது. கப்பல் முழுமையாக மூழ்குவதற்கு முன், கப்பல் கேப்டன் உள்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள மாநிலத்தின் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரை ஒதுங்கின. கேரளா மற்றும் தமிழ்நாட்டு கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் மரத்தடிகள், முந்திரிகொட்டைகள் உள்ளிட்டவை கரை ஒதுங்கின.

இதற்கிடையே சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் கூடிய வான் ஹாய் 503 என்ற கப்பல் கண்ணூர் அருகே உள்ள கடலில் தீ விபத்தில் சிக்கியது. தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. கேரளாவில் அடுத்தடுத்து நடந்த 2 கப்பல் விபத்துக்களால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை ஏறப்ட்டது.

கடலில் மூழ்கிய கப்பல்
கடலில் மூழ்கிய எம்.எஸ்.சி எல்சா -3 கப்பல்

இந்த நிலையில் விபத்துக்குள்ளான கப்பல் கம்பெனி மீது வழக்குப்பதிவு செய்து இழப்பீடு பெறவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கப்பல் விபத்தை மாநில சிறப்பு பேரிடராக கேரள அரசு அறிவித்தது. மேலும் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாயும் 6 கிலோ அரிசியும் வழங்குவதாக அறிவித்த கேரள அரசு, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி எல்சா -3 கப்பலுக்கி எதிராக கேரளா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கொச்சி கப்பல் விபத்து

சி.ஷாம்ஜி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போர்ட் கொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தவகல் அறிக்கையில், `எம்.எஸ்.சி எல்சா-3 கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவராக கப்பல் கேப்டனும், மூன்றாவதாக கப்பல் ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள சரக்குகளும், வெடிபொருட்களும் கப்பலில் இருப்பது தெரிந்தும், மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவிட்டது" - அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.விமான நிலையத... மேலும் பார்க்க