செய்திகள் :

Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு

post image

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை.

இதனால் மாநில அரசுக்கு இந்தத் திட்டம் மூலம் கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் மும்பையில் கனமழை பெய்தபோது, மற்ற ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் மோனோ ரயிலில் பயணிகள் கூட்டம் திடீரென அதிகரித்தது.

இதன் காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்றுவிட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மோனோ ரயிலின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பும் இதேபோல் மோனோ ரயில் பாதி வழியில் நின்றது. இதனால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணவும், மோனோ ரயில் சேவையை மேம்படுத்தவும் மாநில அரசு தற்காலிகமாக மோனோ ரயில் சேவையை நிறுத்த தீர்மானித்துள்ளது.

புதிய சிக்னல் முறையை அமல்படுத்தவும், பழையவற்றை மாற்றியமைக்கவும் வசதியாக மோனோ ரயில் சேவை வரும் 20ஆம் தேதியிலிருந்து காலவரையின்றி நிறுத்தப்படுகிறது.

புதிதாக 10 மோனோ ரயில்கள் வாங்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 ரயில்கள் டெலிவரி செய்யப்பட்டுவிட்டன.

மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்ட காலத்தில் புதிய மோனோ ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும், ஏற்கெனவே இருக்கும் ரயில்களை பழுதுபார்க்கவும், ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில்,

''மோனோ ரயில் சேவையை வலுப்படுத்த இந்த இடைவெளி தேவையாக இருக்கிறது.

மீண்டும் வலுவான முறையில் மோனோ ரயில் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

இரண்டு மாதம் கழித்து மோனோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.

மோனோ ரயிலை இயக்குவதன் மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.529 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மோனோ ரயில் தொடங்கப்பட்டபோது அதில் தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது வெறும் 18 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். மோனோ ரயில் போக்குவரத்து 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாக நிறுத்தப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்

மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது. சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவ... மேலும் பார்க்க

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக... மேலும் பார்க்க

Uttar Pradesh: `இரு முறை கடித்தால் முகாம்களில் அடைப்பு' - தெருநாய் பிரச்னைக்கு புதிய நெறிமுறைகள்

தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத... மேலும் பார்க்க

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக... மேலும் பார்க்க

குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்ன?

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள "டிங் டிங்" என்ற இரண்டு வய... மேலும் பார்க்க