செய்திகள் :

Nobel Prize: ``அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்" - வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!

post image

காசா - இஸ்ரேல் இடையே நடந்துவரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 20 நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்சமாக இருக்கின்றன என அரபு நாடுகள் குரலெழுப்பினாலும், தற்போதைய சூழலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் போதும் என்ற மனநிலை உலக நாடுகளுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

இந்த நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப்,``எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தன் இராணுவத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட இரு நாட்டின் எல்லைக்கு திரும்பப் பெறும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்! இந்த வரலாற்று மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வை நிகழச் செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய மத்தியஸ்தர்களான கத்தார், எகிப்து மற்றும் துருக்கிக்கு நன்றி" தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு அணிவிக்கும் ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார்.

அவரின் பதிவில், ``அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசை வழங்குங்கள். அவர் அதற்கு தகுதியானவர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``அது தற்செயல் அல்ல, திட்டமிட்டசதி'' - வாகனம் மோதிய விவகாரம் குறித்து திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து அக்டோபர் 07 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது. அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடி... மேலும் பார்க்க

``காசாவுக்காக திடீர் கண்ணீர், நன்றாக நடிக்கிறீர்கள்!'' - முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் சீமான்

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் சில தினங்களுக்கு முன்பு கண்டனப் போராட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைப... மேலும் பார்க்க

படையெடுத்த இளைஞர்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து - முதல் நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்; மாணவர்கள் மீது தடியடி - பதற்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகம்

`நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு...'காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்... மேலும் பார்க்க

Nobel Prize: விதிகள் மீறப்படுமா? ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுமா?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் 15-க்கும் மேற்பட்ட முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மீண்டும்... மீண்டும்...' சொல்... மேலும் பார்க்க

SIR: ``எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா

இன்னும் சில மாதங்களில் பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின... மேலும் பார்க்க