செய்திகள் :

``அது தற்செயல் அல்ல, திட்டமிட்டசதி'' - வாகனம் மோதிய விவகாரம் குறித்து திருமாவளவன் குற்றச்சாட்டு

post image

சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து அக்டோபர் 07 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது.

அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த திருமாவளவன், ``எனது வண்டிக்கு முன்னால் இருசக்கர வண்டியில் ஒரு இளைஞர் போய்க்கொண்டிருந்தார்."

திருமாவளவன்
திருமாவளவன்

அவர் நம்முடைய வண்டியை நன்றாக கவனித்துவிட்டு, அந்த வண்டியில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதைப் பார்த்து, வேண்டுமென்றே வம்பு இழுக்கிற மனநிலையில் வேகமாகப் பேசியிருக்கிறார்.

அந்தத் தம்பி எந்த நோக்கத்திலே வந்து பிரச்னை செய்தாலும் பரவாயில்லை, அதை விட்டுவிடுங்கள். பிரச்னையைப் பெரிதாக்க வேண்டாம். அவர் எந்த நோக்கத்தில் செய்தாலும், அது அவருக்கு உரியது.

அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். அவர் வண்டி நம்முடைய வண்டியின் மீது மோதவில்லை, அப்படி விபத்து என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் நடக்கவில்லை.

ஆனால் சிலர் விபத்து என்கிறார்கள், சிலர் அவருடைய வண்டியில் நம்முடைய கார் மோதியது என்றார்கள். எல்லாம் அப்பட்டமான, தவறான தகவல்கள். எல்லாவற்றிலும் திரிபு வாதம்தான்.

பொய் செய்திகளைப் பரப்புவது, அவதூறுகளைப் பரப்புவது, வதந்திகளைப் பரப்புவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூகப் பதற்றங்களை உருவாக்குவது... இதுதான் அவர்களின் அரசியல். அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது." எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவரின் எக்ஸ் பக்கத்தில், ``உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி' என்பது தெரியவருகிறது."

திருமாவளவன்
திருமாவளவன்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபடத் தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக ஐயமற விசாரித்திட வேண்டுமெனக் கோருகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் மு... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?

'எனக்கில்ல... எனக்கில்ல...' - இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும். கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார... மேலும் பார்க்க

Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர... மேலும் பார்க்க