செய்திகள் :

வேலூர்: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை - ஆண் நண்பனுடன் சிக்கிய மனைவி

post image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்குஉட்பட்ட ஊனை வெங்கடசாமிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன் (35). இவரின் காதல் மனைவி கலைவாணி (30). குடும்பத் தகராறு காரணமாக, சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கந்தனேரி அருகிலுள்ள பொந்தியம் தோப்புப் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் தேவேந்திரன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

பள்ளிகொண்டா காவல் நிலையப் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்தபோது, தேவேந்திரனை அவரின் மனைவி கலைவாணியே தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாகத் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட கணவர் தேவேந்திரன்

அவர்களை தேடியபோது, வேலூர் சத்துவாச்சாரி அடுத்துள்ள பெருமுகை பகுதியில் பிடிபட்டனர். விசாரணையில், கலைவாணியின் ஆண் நண்பர் ராணிப்பேட்டை நவல்பூரைச் சேர்ந்த அருண்குமார் (25) எனத் தெரியவந்தது. ஷு கம்பெனி ஒன்றில் இருவரும் ஒன்றாக வேலை செய்துவந்தபோது ஏற்பட்ட பழக்கம், இப்போதும் தொடர்ந்ததால் திருமணத்தை மீறிய உறவில் அருண்குமாருடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார் கலைவாணி. மனைவியின் தகாத உறவு கணவன் தேவேந்திரனுக்கும் தெரியவந்ததால், மனைவியை அவர் கண்டித்திருக்கிறார்.

இதையடுத்து, பெருமுகை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவி, பிள்ளைகளுடன் குடிப்பெயர்ந்தார் கணவன் தேவேந்திரன். அதன் பிறகும், கணவனுக்குத் தெரியாமல் ஆண் நண்பர் அருண்குமாரைத் தனிமையில் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் கலைவாணி. வேலை நிமித்தமாக கணவர் வெளியூர் சென்றுவிடும்போது, ஆண் நண்பனை வீட்டுக்கே வரவழைத்து தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட கணவர் தேவேந்திரன் மனவேதனைக்குள்ளாகி மனைவியைப் பிரிந்து அணைக்கட்டுப் பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவி கலைவாணி, ஆண் நண்பர் அருண்குமார்

இருப்பினும், பிள்ளைகள் மீதான பாசத்தில் அடிக்கடி பெருமுகைப் பகுதிக்கு வந்து சென்றுள்ளார். இதை மனைவி கலைவாணி விரும்பவில்லை. தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கோபமடைந்த மனைவி கலைவாணி தனது ஆண் நண்பர் அருண்குமாருடன் சேர்ந்து கணவர் தேவேந்திரனை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறார்.

அதன்படி, கடந்த 7-ம் தேதி இரவு தேவேந்திரனை பின்தொடர்ந்து நோட்டமிட்டு கடுமையாக தாக்கி கொலை செய்து, சடலத்தை வீசிவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நோய்; கொன்றுவிட்டு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கணவன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரக்குளம் ஹைஸ்கூல் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் பாசுராங்கன்(73). இவரது மனைவி ஜெயந்தி(63). இவர்களுக்கு ரஞ்சித் என்ற மகனும், ரசனா என்ற மகளும் உள்ளனர். ரஞ்சித் வெளிநாட்டில் வேலை ... மேலும் பார்க்க

விருதுநகர்: விடுமுறைக்கு வந்த மகன் - கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தாயின் இரண்டாவது கணவர்

விருதுநகர் அருகே காட்டுப்பகுதியில் வைத்து 6 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து, அப்படியே விட்டு வந்த தாயின் இரண்டாவது கணவர் செல்வத்தை விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். விருதுநகர் ஏ.டி.ப... மேலும் பார்க்க

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உய... மேலும் பார்க்க

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க