செய்திகள் :

மனைவியின் நோய்; கொன்றுவிட்டு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கணவன்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரக்குளம் ஹைஸ்கூல் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் பாசுராங்கன்(73). இவரது மனைவி ஜெயந்தி(63). இவர்களுக்கு ரஞ்சித் என்ற மகனும், ரசனா என்ற மகளும் உள்ளனர். ரஞ்சித் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், ரசனாவுக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் இருக்கிறார்.

பாசுராங்கன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் ஊருக்கு திரும்பி வந்தவர், திருவனந்தபுரத்தில் மர வேலைகள் செய்து வந்தார். பாசுராங்கனின் மனைவிக்கு சிறுநீரகம் சம்பந்தமான நோய் இருந்து வந்துள்ளது. பாசுராங்கனுக்கு கடன் இருந்துவரும் நிலையிலும் தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் எடுத்தார்.

இந்த நிலையில் ஜெயந்தியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து இம்மாதம் தொடக்கத்தில் திருவனந்தபுரம் பட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தினமும் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

சித்திரிப்பு படம்
தற்கொலை

மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து உடன் இருந்து கவனித்து வந்த கணவர் பாசுராங்கன் மன அழுத்தத்தில் காணப்பட்டார். இதற்கிடையே ஜெயந்தியின் உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மனைவியின் சிகிச்சைக்க்காக பணம் புரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். மருத்துவமனை அறையில் இருந்த மின்சார கேபிளை தனது மனைவி ஜெயந்தியின் கழுத்தில் இறுக்கி கொலை செய்தார் பாசுராங்கன். பின்னர் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தார்.

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பாசுராங்கன் மற்றும் கொலையான ஜெயந்தி

5வது மாடியில் இருந்து குதித்ததில், கீழே விழுந்து படுகாயம் அடைந்த பாசுராங்கனை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தசம்பவம் குறித்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை - ஆண் நண்பனுடன் சிக்கிய மனைவி

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்குஉட்பட்ட ஊனை வெங்கடசாமிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன் (35). இவரின் காதல் மனைவி கலைவாணி (30). குடும்பத் தகராறு காரணமாக, சமீபத்தில்... மேலும் பார்க்க

விருதுநகர்: விடுமுறைக்கு வந்த மகன் - கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தாயின் இரண்டாவது கணவர்

விருதுநகர் அருகே காட்டுப்பகுதியில் வைத்து 6 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து, அப்படியே விட்டு வந்த தாயின் இரண்டாவது கணவர் செல்வத்தை விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். விருதுநகர் ஏ.டி.ப... மேலும் பார்க்க

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உய... மேலும் பார்க்க

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க