செய்திகள் :

படையெடுத்த இளைஞர்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து - முதல் நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம்

post image

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தார்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாள் இரவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாலத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம் என்பதால், அதில் பயணித்து போட்டோ எடுப்பதற்காக நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை ஏராளமான இளைஞர்கள் மேம்பாலத்திற்கு படையெடுத்தனர். அதில் பலரும் கட்டுப்பாடின்றி வேகமாக வாகனங்களை இயக்கினார்கள். மேம்பாலத்தின் ஏறு, இறங்கு தளங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ஃபி எடுக்க தொடங்கினார்கள்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

ஏறு, இறங்கு தளங்கள் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. இதனால எந்தப் பக்கம் ஏற வேண்டும், எந்தப் பக்கம் இறங்க வேண்டும் என்று தெரியாமல் மக்கள் குழம்பினார்கள். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உப்பிலிபாளையம் பகுதியில் பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அது பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம் ஆகியவ்ற்றை இணைக்கும் பகுதியாக உள்ளது. ரவுண்டானா மிகவும் பெரிதாக இருப்பதால் அங்கிருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேம்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், “மக்கள் பாலத்தை பார்வையிட அதிகளவு வந்த காரணத்தால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதில் பெரும்பாலான வாகனங்களில் ஆங்காங்கே யூடர்ன் எடுத்ததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். ஒருவாரம் ஆய்வு செய்துவிட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.” என்றார்.

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் மு... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?

'எனக்கில்ல... எனக்கில்ல...' - இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும். கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார... மேலும் பார்க்க

Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர... மேலும் பார்க்க

``அது தற்செயல் அல்ல, திட்டமிட்டசதி'' - வாகனம் மோதிய விவகாரம் குறித்து திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து அக்டோபர் 07 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது. அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடி... மேலும் பார்க்க

``காசாவுக்காக திடீர் கண்ணீர், நன்றாக நடிக்கிறீர்கள்!'' - முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் சீமான்

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் சில தினங்களுக்கு முன்பு கண்டனப் போராட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைப... மேலும் பார்க்க