செய்திகள் :

PMK - Ramadoss : ``கலைஞர் பாணி... மூச்சிருக்கும் வரை நானே..!" - ராமதாஸ் பேசியது என்ன?

post image

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அன்புமணி நடத்திய பொதுகுழு கூட்டத்தைத் தவிர்க்கவே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சைக்குரிய பேச்சுகள் எழுந்தன.

அருள், பா.ம.க எம்.எல்.ஏ
அருள், பா.ம.க எம்.எல்.ஏ

நேற்றையதினம் பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அருளுக்கு பா.ம.க இணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அன்புமணியின் கூட்டத்தைத் தவிர்பதற்காக மருத்துவமனையில் சேரவில்லை என்று அருள் விளக்கமளித்தார்.

நேற்று மாலை அருள் கவனித்து வந்த சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு க.சரவணன் என்பவரை அன்புமணி நியமித்தார்.

காலையில் அருளை மாநில பொறுப்பில் தந்தை நியமித்த நிலையில், மாலையில் அவரின் மாவட்ட செயலாளர் பதவியில் வேறொருவரை மகன் நியமித்திருப்பது பா.ம.க உள்கட்சி அரசியலை மேலும் பரபரப்பாக்கியது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "கலைஞர் பாணியில் மூச்சிருக்கும் வரை நானே கட்சியின் தலைவராகப் பணியாற்றுவேன்" என்று கூறியிருக்கிறார்.

தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஏதாவது விஷமிகள் செய்திருப்பார்கள். போஸ்டர்களை யார் வேண்டுமானாலும் ஒட்டலாம். ஆனால் கிழிக்கக் கூடாது. அது நாகரீகமறது" என்றார்.

ராமதாஸ்
ராமதாஸ்

நேற்றுமாலை அன்புமணி அருளின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமித்தது குறித்து அருள் பேசுகையில், 'கட்சியில் யாரையும் பதவியில் அமர்த்தவும் நீக்கவும் ஐயா (ராமதாஸ்) ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது' எனக் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,

"அருள் மிகச் சரியாக சொல்லியிருக்கிறார். மாவட்ட செயலாளர் பொறுப்புடன் கூடுதலாக அவருக்கு மாநில அளவிலான இணைச் செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறோம்" எனப் பதிலளித்தார் ராமதாஸ்.

(இந்த செய்தி குறித்த கூடுதல் விவரங்கள் சிறிது நேரத்தில் இதே பக்கத்தில் தொடர்ந்து சேர்க்கப்படும்)

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார... மேலும் பார்க்க

PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! - சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை

2006, மே 8-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிந்து, வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் பரபரப்புகள் அடங்கியது என பெருமூச்சு விட நி... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? - விசாவிற்கு 'இந்த' தகவல் கட்டாயம்! - புது ரூல்

அமெரிக்கா தன் நாட்டுக்குள் வெளிநாட்டினர் அதிகம் குடியேறாமல் இருக்க, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், அந்த நாட்டுக்குள் குடியேறுபவர்கள் அரசுக்கு எதிரான எந்தப் பிரச்னை மற்றும் போராட... மேலும் பார்க்க

இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | களம் 4: Iran vs Israel

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவைகட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை எடுத்து இரு நாடுகளிடையே நடந்த 12 நாள் போரின் கேந்திர அரசியல் விளைவுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகி... மேலும் பார்க்க