செய்திகள் :

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

post image

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மசிஹ் அமர்வில் இந்த வழக்கை விசாரித்தனர். 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த வன்முறை சம்பவம் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு வலுவாக மறுப்பு தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அந்த வன்முறைக்குப் பிறகு 2000 ச.கி.மீ இடத்தை சீனா ஆக்கிரமித்ததாகவும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கம் 'சரணடைந்துவிட்டதாகவும்' ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். அவர்மீது ராணுவத்தை இழிவுபடுத்தியதாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

"2000 ச.கி.மீ இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இது போலப் பேச மாட்டீர்கள்" என்றார் நீதிபதி தத்தா.

"நீங்கள் அங்கே இருந்தீர்களா, உங்களிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி காந்தி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்காவிட்டால்... அவர் எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதி தத்தா, "எனில் நீங்கள் இந்த விஷயங்களை ஏன் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை?" என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரிய ராகுல் காந்தியின் மனுவுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது நீதிமன்றம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show

* கந்தன்மலை திரைப்படத்தில் நடிக்கும் H.ராஜா!* நயினார் நாகேந்திரன் வீட்டில் விருந்து Food Review சொன்ன தமிழிசை!* ஆதாரமாக மெசெஜ்-ஐ காட்டிய ஓ.பன்னீர்செல்வம்?* ஓபிஎஸுக்கு நயினார் நாகேந்திரன் பதில்! “முதலம... மேலும் பார்க்க

Trump: "இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போகிறேன்; ஏனெனில்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

உக்ரைன் மீது மூன்றாண்டுகளுக்கு மேலாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவுக்கெதிராகத் தாங்கள் நிற்பதாக அமெரிக்கா தன்னைக் காட்டிக்கொள்கிறது.இந்தியாவானது, யாருக்கும் ஆதரவில்லை போரை எதிர்கிறோம் என்ற... மேலும் பார்க்க

Seeman: "கிங்டம் திரைப்படத்தை நிறுத்துங்கள்; திரையரங்கை முற்றுகையிடுவோம்" - சீமான் கண்டனம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அனிருத் இசையில் கௌதம் தின்னனுரி இயக்கிய திரைப்படம் கிங்டம். இந்தத் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாகக் கூறும் நாம் தமிழர் கட்சி, இப்படத்தைத் திரையிடுவதை நிறுத்த வேண... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: வெளிநடப்பு, வாட்டர் பாட்டில் வீச்சு, தர்ணா - மாநகராட்சி கூட்டத்தில் ரகளை; என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் கவுன்ன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், 12வது வார்டு த... மேலும் பார்க்க

Durai Vaiko: பிரதமர் மோடியுடன் அவரச சந்திப்பு; காரணம் இதுதான் துரை வைகோ விளக்கம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க