செய்திகள் :

RCB அணி விற்கப்படுகிறதா? - பிரமிக்க வைக்கும் மதிப்பு; டியாஜியோ பிஎல்சி நிறுவனம் சொல்வதென்ன?

post image

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர் மாறுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போது உரிமையாளராக இருக்கும் பிரிட்டீஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, பகுதியளவு அல்லது முழுவதுமாக அணியின் உரிமையை விற்க விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

RCB

RCB அணியின் விலை மதிப்பு என்ன?

கடந்த வாரம், RCB அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் டியாஜியோ பிஎல்சி குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியிருக்கிறது.

இந்தியாவில், டியாஜியோ பிஎல்சி மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஆர்சிபி நடத்தப்படுகிறது, ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அணியின் உரிமையை பணமாக்கும் வழிகளைத் தேடி வருகிறது மதுபான நிறுவனம் என வதந்திகள் பரவின.

இதுவரை RCB அணிக்கான உரிமையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ப்ளூம்பெர்க் தளம் அதன் உரிமையாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 16,834 கோடி ரூபாய்) எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நிறுவன செயலாளர் மிட்டல் சங்க்வி, "மேற்கூறப்படும் மீடியா அறிக்கைகள் எல்லாம் யூகங்களின் அடிப்படையானதே என்பதை எங்கள் நிறுவனம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இதுபோன்ற எந்த விவாதத்தையும் நாங்கள் தொடங்கவில்லை" என இந்திய பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான BSE-க்குத் தெரிவித்துள்ளார்.

DIAGEO - RCB

RCB அணி விற்கப்படுவது உறுதியாக தெரியாமலேயே, செய்தி பரவியதும் செவ்வாய்க்கிழமை (10.06.2025) யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.3% உயர்ந்துள்ளது.

RCB அணி நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றாலும், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் பெங்களூருவில் 11 உயிர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2008ம் ஆண்டு RCB அணி தொடங்கப்பட்டபோது விஜய் மல்லையா அதன் உரிமையை வாங்கினார். பின்னர் அவர் கடன் வலையில் சிக்கிய பிறகு டியாஜியோ பிஎல்சி தனது துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் RCB -யை வாங்கும் வாய்ப்பைப் பெற்றது. இப்போது உலக அளவில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக விளங்குகிறது RCB.

TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி |Photo Album

நெல்லை-TNPL-2025:திருச்சி கிராண்ட் சோழாஸ்அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றி! மேலும் பார்க்க

ENG vs IND: ராகுல், பண்ட் சென்சுரி; ஆனாலும் சொதப்பிய இந்தியா; ஜோஷ் டங் மேஜிக் | 1st Test Day 4

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது.அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜட... மேலும் பார்க்க

ENG vs IND: `ரெட்டைக் கதிரே...' - சதமடித்து இந்தியாவை மீட்ட Classy ராகுல், Beast பண்ட்!

இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது இந்தியா.அதேபோல், பவுலிங்க... மேலும் பார்க்க

'ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் - சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்... மேலும் பார்க்க

ENG vs IND: `கேட்ச் விட்டதுக்காக உட்கார்ந்து அழ முடியாது!' - பும்ரா பேசியது என்ன?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.ind vs engஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில... மேலும் பார்க்க

ENG vs IND: பண்ட் சாதனை சதம்; அபாரம் காட்டிய ஜோஷ் டங், போப்; சீறிய Boom Boom பும்ரா | 1st Test Day 2

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 20) தொடங்கியது.முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தால் 3 விக்கெட்... மேலும் பார்க்க