செய்திகள் :

Sammoo : பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா?

post image

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் பல நூற்றாண்டுகளாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மூ என்ற கிராமம்தான் இவ்வாறு பல தலைமுறைகளாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது இல்லை. இந்தக் கிராமத்தில் தீபாவளி அன்று வீடுகள் இருள் சூழ்ந்து, விளக்குகளோ, பட்டாசு சத்தமோ இன்றி காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

sammoo village that hasn't celebrated Diwali

இதற்கு காரணமாக ஒரு சோகமான வரலாற்று நிகழ்வு கிராம மக்களால் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தீபாவளியைக் கொண்டாடுவதற்காக தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அப்போது மன்னரின் அவையில் சிப்பாயாகப் பணிபுரிந்த அவரது கணவர் திடீரென இறந்துவிட்டார். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவரின் சிதையிலேயே உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இறக்கும் தருவாயில், அந்தப் பெண், இந்த கிராம மக்கள் யாரும் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று சபித்ததாகக் கூறப்படுகிறது.

அன்றிலிருந்து அந்த கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த சாபத்திற்குப் பயந்து, தலைமுறை தலைமுறையாக இந்த மரபை மக்கள் கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

யாராவது தீபாவளியைக் கொண்டாட முயன்றால், அவர்களுக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடப்பதாகவும், இழப்புகள் ஏற்படுவதாகவும் கிராமத்து பெரியவர்கள் நம்புகின்றனர்.​

இந்த நம்பிக்கையின் காரணமாக, சம்மூ கிராமத்தில் வசிக்கும் மக்கள் தீபாவளி அன்று சிறப்பு உணவுகள் சமைப்பதோ, விளக்குகள் ஏற்றுவதோ இல்லை. மேலும், இந்த கிராமத்தில் இருந்து வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்த மக்கள் கூட, அந்த சாபம் தங்களைத் தொடரும் என்று அஞ்சுவதால், தீபாவளி கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுகின்றனராம்.

Camping: ரூ.1,500தான்.. பிச்சாவரம், ஏலகிரி... 'கேம்பிங்' - நியூ இயருக்கு இப்போவே பிளான் பண்ணுங்க!

இன்னும் இரண்டு மாதங்களில் கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகள் வரப்போகின்றன. அதற்கு இப்போதிருந்தே பிளான் பண்ணத் தொடங்கியிருப்பீர்கள். அந்த விடுமுறையைக் கொண்டாட வெளிநாடு, வெளிமாநிலத்திற்குத்தான் போக வேண்... மேலும் பார்க்க

கேரளா: `பூம்பாவாய் ஆம்பல், ஆம்பல்' - மனதை மயக்கும் மலரிக்கல் கிராமம் | Photo Album

மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மல... மேலும் பார்க்க

Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்

தொடர் விடுமுறை என்றாலே பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆனால் சென்னையில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். சென்னையில் இருந்து பட்ஜெட்டிற்குள் ட்ரிப் செ... மேலும் பார்க்க

பின்லாந்து: உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை; யார் விண்ணப்பிக்கலாம்?

பின்லாந்து, உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாடு தற்போது இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு உருவாக்கப்ப... மேலும் பார்க்க

போர் முனையின் வீர காவியம்; பயணத்தின் நிறைவுப் புள்ளி | திசையெல்லாம் பனி - 13

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`Chennai One' ஒரே APP-ல் இனி பஸ், ரயில், கேப், ஆட்டோ எல்லாமே டிக்கெட் புக்கிங் செய்யலாம் - How to?

சென்னையில் பஸ், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுக்கவும், கேப், ஆட்டோ புக் செய்யவும் ஆல்-இன்-ஒன் ஆப்பாக ‘சென்னை ஒன்’ செயலியை (APP) தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் நீண்ட வ... மேலும் பார்க்க