செய்திகள் :

Seeman: "இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்" -மனம் திறந்து பேசிய சீமான்

post image

அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் (நா.த.க), சினேகன், கரு.பழனியப்பன், வசந்தபாலன், தேவயானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நான் 'தம்பி' படத்தின் தலைப்பில் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அது என் தலைவர் பிரபாகரனைக் குறிக்கும் தலைப்பு. தன் மக்கள் மீது பேரன்பு கொண்ட அவர், தன் இனம் அழுத்தொழிக்கப்படும்போது பெருங்கோபம் கொண்டார். பேரன்பு இருக்கும் இடத்தில்தான் பெருங்கோபம் இருக்கும்.

தலைவருக்குப் பிடித்த இயக்குநர்

தலைவர் அவர்களைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் தமிழ் சினிமா இயக்குநர் குறித்துப் பேசினார். அப்போது, "எத்தணையோ பேர் கதை, வசனம் எழுதி படம் எடுக்கிறீர்கள், ஆனால் பாலு மகேந்திரா மாதிரி ஏன் எடுக்க முடியவில்லை" என்று என்னிடம் கேட்டார். இருவரும் ஒரே ஊர் என்பதால் அதை ஊர் பாசம் என்று நினைத்துக் கொண்டேன்.

தேவையற்ற சிறு நகர்கவுகள், காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்லாமல் கச்சிதமாக இருக்கும் பாலு மகேந்திரவின் திரைப்படங்கள்.

சீமான்

சாதிக்கு எதிராகப் பேசும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படம்

இப்படம் சாதிக்கு எதிராகப் பேசுகிறது. சாதிவெறி, ஆணவம் கொண்ட கூட்டத்திடம் பேரன்பு கொண்ட காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும், பேரன்பு கொண்ட காதலன் பெருங்கோபம் கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் இப்படத்தின் கதை. 'இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி என்கிற சனியனை வச்சு எங்கள சாகடிப்பீங்க' என்று அன்பு கொண்ட நெஞ்சங்கள் கெஞ்சுவதுதான் இந்தப் படம். நல்ல படத்திற்கு தயவு செய்து ஆதவு கொடுங்கள்" என்று பேசியிருக்கிறார் சீமான்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

WhatsApp Channel

Abhinaya: 15 வருடக் காதல்; தொழிலதிபரைக் கரம் பிடித்தார் 'நாடோடிகள்' நடிகை அபிநயா

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஹிட் அடித்த 'நாடோடிகள்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. மாடலாக இருந்த அவர், தெலுங்கு திரையுலகில் 2008ம் ஆண்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்... மேலும் பார்க்க

"உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?" - கமலுடனான சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த சிவராஜ் குமார்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிகர் கமல்ஹாசன் குறித்து நெகிழ்ந்துப் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் குறித்து பேசிய சிவராஜ் குமார், "சிறிய வயதில் இருந்து கமல் சார் ப... மேலும் பார்க்க

Good Bad Ugly: "சைனா செட் மொபைல் மூலமாகதான் என் பாடல் தமிழ்நாட்டுக்கு வந்தது!'' - டார்க்கீ பேட்டி

தமிழ் சுயாதீன இசைதுறை இப்போது பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதற்கு முதல் முதன்மையான காரணமானவர் டார்க்கீ நாகராஜ். சி.டி, ஸ்பாடிஃபை, யூட்யூப் என எந்த தளமும் இல்லாத சமயத்திலே உலகத்தின் அத்தனை பக்கங்... மேலும் பார்க்க

Gangers: `இவர் மேல எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது..' - வடிவேலு குறித்து சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற... மேலும் பார்க்க

``அஜித்துடன் பணியாற்றிய போது அவருக்கு உடல்நிலை சரி இல்லை; அந்த நேரத்திலும் அவர்..'' - சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற... மேலும் பார்க்க