செய்திகள் :

Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவிட்டாரா? Fact check!

post image

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், "தூங்கும் இளவரசர்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.

2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து 20 ஆண்டுகளாக இளவரசர் அல்-வலீத் கோமாவில் உள்ளார். இதற்கிடையில் அரச குடும்ப உறுப்பினர் ஏப்ரல் 18, 2025 அன்று அவரது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு 'தூங்கும் இளவரசர்' என்று அவரது புகைப்படங்கள் மீண்டும் வைரலானது.

yazeed mohamed al-rajhi

இந்தநிலையில் இளவரசர் விழித்தெழுந்து தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதை காண்பிக்கும் வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

வைரலாகும் வீடியோவில் அந்த இளவரசர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, சவுதி அரேபியாவின் தொழிலதிபரான யாசீத் முகமது அல்-ராஜ்ஹி இடம்பெறுகிறார்.

”20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோர விபத்தில் சிக்கிய சவுதியின் தூங்கும் இளவரசர் இறுதியாக மீண்டும் உயிர் பெற்றார், அவரை விட்டுக்கொடுக்க மறுத்த தந்தைக்கு நன்றி" என்று கூறிய வீடியோவில் இளவரசர் இல்லை, அவருக்கு பதிலாக அதில் காணப்படுபவர் யாசீத் முகமது அல்-ரஜ்ஹி ஆகும்.

இவர் சமீபத்தில் பாஜா ஜோர்டான் பந்தயத்தின் கார் விபத்தில் காயமடைந்தார். பின்னர் குணமடைந்த அவர் தனது அன்புக்குரியவர்களுடன் உரையாடுவதைக் காட்டும் பல வீடியோக்கள் பகிரப்பட்டன. இந்த நிலையில் தான் "ஸ்லீப்பிங் பிரின்ஸ்" கதையுடன் இந்த வீடியோவை தவறாக இணைத்து, அதனை இணையதளத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

இளவரசருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் வாழ்ந்துவரும் இளவரசருக்கு உணவு குழாய் மூலம் உணவளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?

மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதும... மேலும் பார்க்க

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60... மேலும் பார்க்க

மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!

மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் எ... மேலும் பார்க்க

SWP மூலம் 50+ வயதினர் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவது எப்படி?

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 50+ வயதா? வாழ்வின் இனிமையான ஓய்வுக்காலத்தை நோக்கி திட்டமிட வேண்டிய நேரமிது. உங்க சேமிப்பின் பெரும்பகுதியை ஃபிக்சட் டெப்பாசிட் இல்ல ரொக்கமாக வைச்சு இருக்கீங்களா? நீங்... மேலும் பார்க்க

Condemn-க்குப் பதிலாக 'Condom’ என எழுதிய பாகிஸ்தான் பிரதமர்? வைரல் ஸ்கிரீன்ஷாட்டின் பின்னணி என்ன?

ஈரானின் அணு சக்தி நிலையங்கள், கட்டுப்பாட்டு மையம், அணு உலை ஆகியவற்றைக் குறிவைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதில் தாக்க... மேலும் பார்க்க