செய்திகள் :

TASMAC வழக்கு: `தமிழ்நாட்டை விட்டு, மற்ற மாநில நீதிமன்றத்தை நாடுவது ஏன்?' - எடப்பாடி சொன்ன காரணம்

post image

அந்த தியாகி யார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து சென்றிருந்தனர்.

அதுமட்டுமின்றி சட்டப்பேரவைக்குள் அந்த தியாகி யார் என்ற பதாகைகளைக் காட்டி அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் அவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதிமுகவினர்
அதிமுகவினர்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " இன்றையத் தினம் சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

டாஸ்மாக் அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்திருந்தது.

இதில் மற்ற மாநிலங்களில் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அரசின் டாஸ்மாக் நிறுவனம் நாடி இருக்கிறது. ஏன்? தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடாமல் மற்ற மாநில நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் அது குறித்து சட்டப்பேரவையில் பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்த அரசாங்கம் தவறு செய்திருக்கிறது.

அதிமுகவினர்
அதிமுகவினர்

மற்ற மாநிலங்களில் வழக்குத் தொடர்ந்தால்தான் பத்திரிக்கையின் வாயிலாக எந்தத் தகவலும் வெளிவராது என்று திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தை நாடாமல் இருக்கின்றனர்.

என் மீதும், எங்கள் அமைச்சர்களின் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அப்போது நாங்கள் வெளி மாநில நீதிமன்றத்தை நாடி இருந்தோமா? நாங்கள் வழக்கை இங்குதான் எதிர்க்கொண்டோம். ஆனால் இவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதனால்தான் பயப்படுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தியாகி யார்? என்ற கேள்விக்கு, 'நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகி' என்று கூறியிருக்கிறார். அதிமுக ஒருபோதும் நொந்து நூடுல்ஸ் ஆனது கிடையாது.

எவ்வளவு பிரச்னையை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். உன்னால் முடியுமா? நான் எப்போது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ ?அப்போது இருந்து பிரச்னையைச் சந்தித்திருக்கிறேன்.

எடப்பாடி
எடப்பாடி

எதற்கும் அஞ்சியது கிடையாது. நான் மட்டும் அல்ல அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதற்கும் அஞ்சியவர்கள் கிடையாது" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் வெளியேற்றப்படவில்லை. அவர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா தடை' - சவூதி அரேபியா அறிவிப்பும் காரணமும்!

இன்னும் சில மாதங்களில் இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை சவவூதி அரேபியா அரசு செயல்படுத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதி... மேலும் பார்க்க

WAQF Bill: ``ஆ.ராசா தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' - முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதா குறித்து பேசுகையில், "வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மூட்டுவலி; Uric Acid அதிகரித்தது தான் காரணமா?

Doctor Vikatan: என் வயது 43. கடந்த சில மாதங்களாக மூட்டுகளில், கால்களில் வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் எடுத்தும்குணம் தெரியவில்லை. பிளட் டெஸ்ட் செய்து யூரிக் ஆசிட் அளவை சரிபார்க்கும்படிசொல்கிற... மேலும் பார்க்க

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.... மேலும் பார்க்க

``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் தாகூர் எம்.பி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் எதிர்கட... மேலும் பார்க்க