செய்திகள் :

TJS George: புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார்

post image

புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டி.ஜே.எஸ் ஜார்ஜ் (97) உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.

1928ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் டி.ஜே.எஸ். ஜார்ஜ்.

இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற இவர் 1950 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பேயில் 'Free Press Journal'-ல் பத்திரிகையாளராகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

டி.ஜே.எஸ் ஜார்ஜ்
டி.ஜே.எஸ் ஜார்ஜ்

'The New Indian Express' பத்திரிகையின் தலையங்க கட்டுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் 1300 கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

'Asian Age', 'Searchlight' போன்ற பத்திரிகைகளிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையப் புத்தகங்களை எழுதி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய தொண்டுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நையாண்டித் தனமும் கிண்டலும் நிறைந்த எழுத்துகளுக்குப் பெயர் பெற்ற ஜார்ஜ் 93 வயது வரை பத்திரிகைத்துறையில் பணியாற்றி இருக்கிறார்.

டி.ஜே.எஸ் ஜார்ஜ்
டி.ஜே.எஸ் ஜார்ஜ்

கேரளத்தில் பிறந்திருந்தாலும், தன்னுடைய பெரும்பாலான காலத்தை பெங்களூருவில் கழித்திருக்கிறார்.

1965 ஆம் ஆண்டு சர்ச்லைட் பத்திரிகையில் பணியாற்றியபோது அப்போதைய பிகார் முதல்வர் கேபி ஷாகேவுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் குறிப்பிடத்தக்கது.

'அருட்செல்வர் மொழி பெயர்ப்பு விருது விழா' - விருது பெறுபவர்கள் யார் யார்?

இராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏ.வி.எம் அறக்கட்டளை இணைந்து நடத்தும், 58வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா சென்னை, ஏ.வி.எம் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறுகி... மேலும் பார்க்க

அந்த சின்ன சைஸ் விகடன் புத்தகத்தை மீண்டும் கையில் ஏந்த வேண்டும்! | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`மனித ஆசைகளின் எல்லையை ஆராய்ந்தவர்' - பத்ம பூஷன் எஸ்.எல். பைரப்பா காலமானார்

கன்னட இலக்கியத்தின் உச்சம் தொட்ட எழுத்தாளர் சாந்தேசிவர லிங்கண்ணையா பைரப்பா. பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இவர், நேற்று பெங்களூரில் தன் 94- வது வயதில் காலமானார். ஆகஸ்ட் 20, 1931-ல் ஹாசன் ... மேலும் பார்க்க

``என் வாசிப்புக்கு ஆசிரியர்களே காரணம்!'' - நெகிழ்ச்சியூட்டும் 60 ஆண்டுகால `புத்தக மனிதர்' மோகன்தாஸ்!

திருநெல்வேலியில் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், தனது 12-வது வயதிலிருந்து 60 ஆண்டுகளாக புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறார். அதற்கு சாட்சியாக வீடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட புத்த... மேலும் பார்க்க

படுப்பதற்கு சாக்கு விரிப்பு, மழை பெய்தால் ஒழுகும் இடம்! - சுக துக்கங்களை கடந்த பாதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனிதன்-விலங்கு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆரோக்கியமான வழி! - தெளிவானப் பார்வை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க