செய்திகள் :

VCK: "திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால், விசிக அக்கூட்டணியில் இருக்குமா?" - திருமாவளவன் பதில் என்ன?

post image

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க சேர்ந்து என்.டி.ஏ கூட்டணியாக உள்ளன. அ.தி.மு.க கூட்டணிக்குத் தனியாகப் பெயர் வைத்துள்ளதா எனத் தெரியவில்லை. பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, கூட்டணி பற்றி கவலையில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

பா.ம.க கட்சி தி.மு.க கூட்டணி வந்தால் வி.சி.க கட்சி தி.மு.க-வில் இருக்குமா என்பது மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் கேட்கலாம்.

பா.ஜ.க, பா.ம.க இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எண்ணிக்கை பற்றி எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.

எண்ணிக்கை பற்றி கட்சியினரும் பேசியதில்லை. பிரச்னை வராது. நீங்கள் சொல்வதை வைத்து நாங்கள் பேச்சு வார்த்தையின்போது பார்த்துக்கொள்வோம். திரை உலகில் போதை கலாசாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றிக் கேட்கிறீர்கள். அது, அதிர்ச்சியான ஒன்று.

திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உண்மையில் அதிர்ச்சியான விஷயம். தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும். இதற்குக் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும்.

அன்புமணி - ராமதாஸ் - பாமக
அன்புமணி - ராமதாஸ் - பாமக

தனி உளவுப் பிரிவு இருந்தாலும் தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும். தி.மு.க-வுக்கு என்ன சிக்கல் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பெரியார், அண்ணாவைப் பற்றி இழிவாகச் சிறுமைப்படுத்தும், அவமதிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எதற்கு என அவர்கள்தான் சொல்ல வேண்டும். முருகன் பக்தர்கள் மாநாடு மோடி பக்தர்களின் மாநாடாகத்தான் நடைபெற்றது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதி மகனுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?' - இ.பி.எஸ் காட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22), மதுரையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களின் முன்னிலையில்... மேலும் பார்க்க

தஞ்சை: ”சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்”- அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ளது செண்பகவள்ளி நகர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மெயின் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் இன... மேலும் பார்க்க

'இனி எங்களை சீண்டினால், பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்' - அமெரிக்காவை எச்சரிக்கும் காமேனி

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவில், ஈரானின் அணு ஆயுதத் திட்டப் பகுதிகளைத் தாக்கியது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாக பார்க்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் உச்சத் தலைவர் காமேனி... மேலும் பார்க்க

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார... மேலும் பார்க்க