செய்திகள் :

Vikatan Cartoon : கருத்து சுதந்திரத்திற்காக உடன் நின்றவர்களுக்கு நன்றி!

post image

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் நமது வாசகர்களுக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. குறிப்பிட்ட கார்ட்டூன் குறித்த விளக்கம் கேட்கப்பட்டாலும், இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் விகடனுக்கு வரவில்லை.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.

விகடன்

இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை குறிப்பிட்ட கார்ட்டூன் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என ஏற்கனவே விகடன் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்த இணையதள முடக்கம் விவகாரத்தில், ஊடக சுதந்திரத்துக்காக, கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மாவட்ட, மாநில பத்திரிகையாளர் சங்கங்கள், திரை பிரபலங்கள், எல்லாவற்றுக்கும் மேலான விகடன் வாசகர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், உங்கள் குரல் கருத்து சுதந்திரத்திற்கானது. அதுவே விகடனின் குரலும்.!
முதல்வர் ஸ்டாலின்
வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்
விஜய், தலைவர் த.வெ.க
திருமாவளவன், விசிக
ரவிக்குமார் எம்.பி
சசிகாந்த் செந்தில் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக
கனிமொழி எம்.பி,
சு.வெங்கடேசன் எம்.பி,

முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல் திருமாவளவர் எம்.பி, ரவிக்குமார் எம்.பி. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில் எம்.பி, மாணிக்கம் தாக்கூர் எம்.பி, த.வெ.க தலைவர் விஜய், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், த.வா.க வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, IUML மாநில துணைத் தலைவர் நவாஸ் கனி, எம்.பி. கனிமொழி எம்.பி, த.வெ.கழகத்தின் ஆதவ் அர்ஜுனா, மநீம தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜோதிமணி எம்.பி, எம்.எம் அப்துல்லா எம்.பி, கேளர காங்கிரஸ், சு.வெங்கடேசன் எம்.பி, பரந்தாமன் எம்.எல்.ஏ., காங்கிரஸின் லக்‌ஷ்மி ராமசந்திரன், பால பாரதி, விஜய் வசந்த் எம்.பி, திருப்பூர் எம்.பி.சுப்பராயன், சி.டி நிர்மல் குமார்...

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நடிகர் பிரகாஷ் ராஜ், விஷால், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பா.ரஞ்சித், திருமுருகன் காந்தி, எழுத்தாளர் அருந்ததி ராய், ஊடகவியலாளர்கள், குணசேகரன், கவிதா முரளிதரன், என்.ராம், அனுஷா ரவி (Editor, TheSouthFirst.com), தன்யா ராஜேந்திரன்(The News Minute Editor)...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் முதல் புதுச்சேரி அனைத்து பத்திரிகையாளர் சங்கம்/மன்றங்கள், என பல அமைப்புகள், வாசகர்கள், எங்கள் கவனத்துக்கு வராமல் அல்லது தவறுதலாக பெயர் விடுப்பட்டவர்கள் என விகடனின் கருத்து சுதந்திரத்துக்கான இந்த போராட்டத்தில் தங்களின் ஆதரவை தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.!

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? - சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர்.இந்நிலையில் அவர்களை விம... மேலும் பார்க்க

`நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா?' - ஆவேசமான பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பா... மேலும் பார்க்க