செய்திகள் :

Zoho : 'AI-ல் கவனம் செலுத்த போகிறேன்...' - சி.இ.ஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு!

post image

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இது குறித்து தனது X வலைதளத்தில் அவர் கூறுகையில், "ஜோஹோ நிறுவனத்தின் 'தலைமை விஞ்ஞானி' என்ற பொறுப்பை ஏற்று, ஆராய்ச்சி மற்றும் நிறுவன மேம்பாட்டில் கவனம் செலுத்தப் போகிறேன். AI-யின் பயன்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதன் மேம்பாடு மற்றும் முக்கிய சவால்களை கருத்தில் கொண்டு நான் பதவி விலகுறேன். மேலும் எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டு பணியை தொடர்வதோடு மட்டுமல்லாமல் R&D முயற்சிகளில் முழு நேர கவனம் செலுத்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது புதிய வேலையை ஆற்றலுடனும் வீரியத்துடனும் எதிர்நோக்குவேன்.

தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை, ஜோஹோ குழுமத்தின் இணை இயக்குனரான 'ஷைலேஷ் குமார் டேவி' ஏற்கிறார். இணை நிறுவனர் 'டோனி தாமஸ்' Zoho US-க்கு தலைமை தாங்கி குழுமத்தை வழி நடத்துவார். மேனேஜ் இன்ஜின் பிரிவிற்கு 'ராஜேஷ் கண்ணன்' அவர்களும், http://zoho.com பிரிவிற்கு 'மணிவேம்பு' அவர்களும் தலைமை தாங்குவார்கள்" எனக் பதிவிட்டுள்ளார்.

ஜோஹோ 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீதர் வேம்பு இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப தொழில் முனைவோர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட நிறுவனமாக ஜோஹோ நிறுவனம் உருவாவதற்கு இவரின் பங்கு மிகப் பெரியது ஆகும்.

`தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்..!' - L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சொல்வதென்ன?

எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, `கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை' என்று குறைபட்டுக்கொண்டார். இது தொடர... மேலும் பார்க்க

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' - ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் ... மேலும் பார்க்க

சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை

சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபை... மேலும் பார்க்க

Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!

இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் ... மேலும் பார்க்க

DRA Astra: மாதவரத்தில் 30க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு: DRA அறிமுகம்

சென்னைரியல்எஸ்டேட்துறையில்பெருமைமிகுநிறுவனமாகதிகழும்DRAசென்னைநகரமக்களின்வாழ்விடங்களைநவீனமுறையில்மாற்றிஅமைத்துவருகிறது.அந்தவகையில்தற்போதுஇந்நிறுவனம்மாதவரத்தின்பிரதானஇடத்தில்‘DRA Astra’என்னும்புதியஅடுக்... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது உங்கள் பழைய தங்க நகைக்கு புது லைஃப்

1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, 'ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்' நகைத் துறையில் ஒரு முன்னணி பெயராக வளர்ந்துள்ளது, தற்போது அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.தங்கம், வைரம், பிளாட்டினம், வ... மேலும் பார்க்க