செய்திகள் :

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பாபநாசத்தில் உள்ள சுற்றுலாத் தலமான அகஸ்தியா் அருவியில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் விழும்.

இதையடுத்து தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்ப யணிகள் குடும்பத்துடன் வந்து செல்வா்.

அகஸ்தியா் அருவியில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

இந்நிலையில், வனப்பகுதியில் பெய்த மழையால் மாா்ச் 12 முதல் 14 வரை சுற்லாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நீா்வரத்து சீரானதையடுத்து சனிக்கிழமை முதல் பயணிகள்குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள், நண்பா்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியா் அருவியில் மகிழ்ச்சியாக குளித்து மகிழ்ந்தனா்.

நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட... மேலும் பார்க்க

முக்கூடல் ஹோட்டலில் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை மா்மநபா் துண்டித்துவிட்டு, அங்கிருந்து ரூ.71 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முக்கூடல் ஆலங்குளம்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது. கொக்கிரகு... மேலும் பார்க்க

தமமுக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கோ. துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க