செய்திகள் :

அச்சுறுத்தும் விமர்சகர்கள்... சர்ச்சையில் பிரேம் குமார்!

post image

இயக்குநர் பிரேம் குமார் விமர்சகர்கள் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

96, மெய்யழகன் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் ஃபஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை எடுக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் துவங்குகிறது.

இதற்கிடையே 96 - 2 திரைப்படத்தின் கதையையும் முழுமையாக எழுதி முடித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரேம் குமார், “மெய்யழகன் திரைப்படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் இன்னும் அதிகமாக தமிழர்கள் கொண்டாடியிருப்பார்கள் என பல பேர் கூறினார்கள். ஆனால், ஓடிடி வெளியீட்டிலேயே எனக்கான பாராட்டுகள் கிடைத்துவிட்டன. இருந்தும், தமிழில் எதிர்பார்த்த வசூல் நிகழவில்லை. விமர்சகர்கள் என்கிற பெயரில் பலர் எதிர்மறையாகப் பேசுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

மெய்யழகனில் கிளி வளர்த்துபோல் காட்சிப்படுத்தியிருந்தேன். அதை ஒருவர் குறிப்பிட்டு கிளி வளர்த்துவது எவ்வளவு கஷ்டம் எனத் தெரியுமா? என விமர்சனம் செய்கிறார். இதுதான் விமர்சனமா? உண்மையில், ஒரு சிலரைத் தவிர்த்து பல விமர்சகர்கள் பைரசியைவிட பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் ஏதோ மனப்பிரச்னை இருக்கிறது” எனக் கூறினார்.

ஒரு இயக்குநராக பிரேம் குமாருக்கு ஆதங்கம் இருந்தாலும் மெய்யழகன் குறித்து எதிர்மறையாக எழுதியவர்களையும் அவர் சாடியதால், சமூக வலைதளங்களில் பலரும் பிரேம் குமாருக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியமாக, 96 திரைப்படம் வெற்றி பெற்றதற்கு விமர்சகர்களின் பங்களிப்பே அதிகம் என பிரேம் குமார் கூறியிருக்கிறார். அவரே, இப்போது விமர்சகர்களுக்கு மனப்பிரச்னை இருக்கிறது என்கிறார். உண்மையான பிரச்னை பிரேம் குமாரிடம்தான் இருக்கிறது எனக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இது நடந்தால் மட்டுமே 96 - 2 உருவாகும்: பிரேம் குமார்

director prem kumar spokes about reviewers

என் சாதனையை முறியடித்த மேடம்..! தேசிய விருது வென்ற சிறுமிக்கு கமல் பாராட்டு!

தேசிய விருது வென்ற சிறுமி த்ரிஷா தோசர் குறித்து நடிகர் கமல் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனது சாதனையை வென்ற நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுள்ளது எனவும் கமல் கூறியுள்ளார்.... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு! செப். 30 தீர்ப்பு!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கட... மேலும் பார்க்க

200 திரைகளில் மறுவெளியீடான குஷி!

நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய... மேலும் பார்க்க

எம்எஸ்எஸ் தொடரில் வரலாறு படைத்த மெஸ்ஸி: தங்கக் காலணி பட்டியலிலும் முதலிடம்!

எம்எஸ்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். நியூயார்க் சிட்டி எப்ஃசி உடனான இன்றைய போட்டியில் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.அசத்தும் மெஸ்ஸி அமெ... மேலும் பார்க்க

ஆட்ட நாயகனான மெஸ்ஸி: இன்டர் மியாமி பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி!

எம்.எல்.எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி நியூயார்க் சிட்டி எஃப்சி அணியுடன் மோதிய போட்டியில் 4-0 என வென்றது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினா... மேலும் பார்க்க

ரூ.100 கோடி வசூலித்த ஹிருதயபூர்வம்..! ரசிகர்களுக்கு மோகன்லால் நன்றி!

நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் ஓணம் வெளியீடாக இந்தப் படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப்... மேலும் பார்க்க