``ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்'' - பாலிவுட் குறித்து த...
அஞ்சல் துறையை நினைவூட்டி பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய மாணவ, மாணவிகள்!
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மழலையர் பள்ளியில் மாணவ, மாணவிகள் தாங்களாகவே கடிதம் எழுதி தங்களது பெற்றோர்களுக்கு தபால் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நமது அன்பு, பாசம், நட்பு உள்ளிட்ட தகவல்களையும் தெரிவிப்பதற்கு தபால் சேவை அவசியமான ஒன்றாகவும் இருந்து வந்தது.
நமது காதலை சுமந்து சென்ற காதலர்களிடம் சேர்த்த ஒரு மிகப்பெரிய காதல் பாலமாக இருந்த கடிதத்தை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மறந்து விட்டோம்.
தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சமூக வலைதளம் வாயிலாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் அஞ்சல் சேவை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் அமைந்துள்ள லிட்டில் ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தாங்களாகவே கடிதத்தில் தங்களது அன்பை எழுதியதுடன் தபால் பெட்டியில் பெற்றோர்களுக்கு தங்களது கடிதத்தை அனுப்பி வைத்தனர்.
அந்த வகையில் மாணவர்கள் தபால் மற்றும் கடிதம் எழுதும் முறை குறித்து அறிந்துகொள்ளவும், கடிதம் எழுதும் திறனை ஊக்குவிக்கும் விதமாகவும் நிகழ்ச்சி நடைபெற்றது.