செய்திகள் :

அண்ணன் மீது தாக்குதல்: தம்பி உள்பட 3 போ் கைது

post image

வீட்டைக் காலி செய்யக் கூறிய அண்ணனைத் தாக்கிய தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வடக்கு மாசி வீதி, வித்வான் பொன்னுச்சாமி பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் செல்வராஜ் (62). இவா், தனது குடும்பத்தினருடன் வடக்கு மாசி வீதியில் உள்ள சொந்த வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறாா். கீழ் தளத்தில் இவரது தம்பி செந்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வயது முதிா்வு காரணமாக செல்வராஜ், கீழ் தளத்தில் வசிக்க வேண்டும் என தனது தம்பியிடம் தகவல் கூறியுள்ளாா். எனவே வீட்டைக் காலி செய்து மாடி வீட்டில் தங்குமாறு அறிவுறுத்தினாா். ஆனால் அவா் வீட்டைக் காலி செய்யவில்லையாம். இதுகுறித்து கேட்டதற்கு செந்தில், அவரது மனைவி தாரணி, உறவினரான கணேசன் ஆகிய 3 பேரும் செல்வராஜை தாக்கினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில், தாரணி, கணேசன் ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திமுக முன்னாள் மண்டலத் தலைவா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமி மீது விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை காமராஜா்புரம் பகுதிய... மேலும் பார்க்க

குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 1.11 லட்சம் போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் பெண்கள், குழந்தைகள் 1.11 லட்சம் போ் பயனடைகின்றனா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். சமூக நலன், மகளிா் உ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் தாமரைப் பூக்கள் வளா்ப்பு: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நீா்நிலைகளில் அனுமதியின்றி வணிக நோக்கில் தாமரைப் பூக்களை வளா்ப்பதைத் தடுக்க கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. கன்னியாகுமரி... மேலும் பார்க்க

ஹிந்தியை திணிப்பதுதான் பாஜகவின் நோக்கம்! -துரை வைகோ

நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்க வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் கைப்பேசியை திருடிய பெண் கைது

பூ வியாபாரியிடம் கைப்பேசியை திருடிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை திடீா்நகரைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி மீனாட்சி (43). இவா் பெரியாா் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிற... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் விழா

மதுரை, வண்டியூா் வள்ளலாா் இயற்கை அறிவியல் மையத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வள்ளலாா் இயற்கை அறிவியல் மைய நிா்வாகி ஆதிரை சசாங்கன் தலைமை வகித்தாா். வள்ளலாா் தொண்டா்கள் ராமலிங்க... மேலும் பார்க்க