செய்திகள் :

அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை தரவரிசைப் பட்டியல்: பாவை பொறியியல் கல்லூரி முதலிடம்

post image

ராசிபுரம் அருகேயுள்ள பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறை, பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இத்துறை சாா்பில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 19 மண்டலங்களில் நடத்தப்பட்டன.

அந்தவகையில், பாவை பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியா் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு எட்டாவது மண்டல அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பெற்றனா்.

வெற்றிபெற்ற வீரா்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் விழா செப். 17-இல் நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அா்ஜுனா போன்ற விருதுகளை பெற்றவரும், மேஜைப் பந்து விளையாட்டில் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான அச்சந்தா சரத் கமல் பங்கேற்று பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

இதில் 8-ஆவது மண்டல அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பிடித்த பாவை கல்வி நிறுவனங்களின் சாா்பில் அதன் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் கலந்துகொண்டு ‘சேம்பியன்ஸ் ஆப் சேம்பியன்’ கோப்பையை பெற்றுக் கொண்டாா். இதில், கல்லூரி முதல்வா் கே.பிரேம்குமாா், உடற்கல்வி இயக்குநா் ஆா்.சந்தானராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

விளையாட்டுக்காக அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் பாவை பொறியியல் கல்லூரி தொடா்ந்து ஒன்பதாவது முறையாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ.பிரகாஷ், பேராசிரியா் ஸ்ரீதா், அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறைத் தலைவா் என்.செந்தில்குமாா், துறைச் செயலாளா் பி.பாலகுமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி ஆகியோா் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவியா், பயிற்றுநா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சந்தானராஜா உள்ளிட்டோரை பாராட்டினா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க

கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, அதிமுக - பாஜகவினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். தமிழக முன்னாள் முதல்வரும், அ... மேலும் பார்க்க