செய்திகள் :

அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!

post image

மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.

மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தினை ஏற்படுத்திய கனரக லாரி, அதானி குழுமத்துக்கு சொந்தமான சுரங்கத்தைச் சேர்ந்தது.

விபத்தில் இருவரும் பலியானது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்துடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, 5 பேருந்துகள், 3 லாரிகளுக்கு தீவைத்து கலவரத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்து கலவரம் செய்யவும் முயன்றனர். இருப்பினும், அதற்குள்ளாக அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின்... மேலும் பார்க்க