செய்திகள் :

அதிபரை காப்பாற்ற முயன்று பிரபலமான ரகசிய உளவாளி 93 வயதில் மரணம்!

post image

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலையின்போது அவரை காப்பாற்ற முயன்ற ரகசிய உளவாளி தனது 93வது வயதில் மரணமடைந்துள்ளார்.

அமெரிக்காவின் 35வது அதிபரான ஜான் எஃப் கென்னடி கடந்த 1963ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி அன்று திறந்த வாகனத்தில் மக்களை நோக்கி கையசைத்தவாறு சென்றபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தின் போது, அதிபரின் மனைவியான ஜாக்குலின் கென்னடியின் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்ட க்ளிண்ட் ஹில் எனும் ரகசிய உளவாளி அவர்களுக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

திடீரென மறைந்திருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டவுடன், ஹில் தனது வாகனத்தை விட்டு கீழே இறங்கி அதிபரின் வாகனத்தை நோக்கி ஓடி அதில் ஏறி குதித்து அதிபரையும் அவரது மனைவியையும் தனது உடலைக் கொண்டு மறைத்து காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், அந்த தாக்குதலில் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மீது குண்டுகள் பாய்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதையும் படிக்க:மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்த முழு சம்பவத்தையும் சுற்றியிருந்த மக்கள் தங்களது கேமராக்களில் எடுத்த புகைப்படங்களில் ஹில் அதிபரின் காரில் பாய்ந்து குதித்தது பதிவாகியிருந்த நிலையில் அது வெளியிடப்பட்டபோது மிகவும் பிரபலமடைந்தது.

அவரது துணிச்சலான அந்த செயலுக்காக அவருக்கு விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன. பின்னர், அவர் அமெரிக்க ரகசிய உளப் பிரிவின் துணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இருப்பினும், அதிபர் கென்னடியின் படுகொலையைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மனவுளைச்சலினால் கடந்த 1975 ஆம் ஆண்டு தனது 43 அவது வயதில் அவரது பணிக்காலம் முடிவதற்கு முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் பிரபல நாவலாசிரியராக அறியப்பட்ட க்ளிண்ட் ஹில் தனது 93வது வயதில் கடந்த பிப்.21 அன்று கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது நினைவுக்குறிப்பு புத்தகத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு லிஸா மெக்குப்பின் எனும் பத்திரிக்கையாளருடன் இணைந்து பணியாற்றிய அவர், 2021 ஆம் ஆண்டு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதிபரின் படுகொலைக்கு பின்னரும் அவரது மனைவியின் பாதுகாவலராக செயல்பட்ட க்ளிண்ட் ஹில், தான் சற்று வேகமாக செயல்பட்டிருந்தால் அதிபரின் உயிரைக் காப்பாற்றியிருக்கக் கூடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலுள்ள கல்லூரியில் ஹோலி நிகச்சிகள் ரத்து செய்யப்பட்டதினால் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டி சிறைப்பிடித்துள்ளனர்.இந்தூரிலுள்ள 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெ... மேலும் பார்க்க

மனிதர்களைத் தாக்க முயன்ற செய்யறிவு ரோபோ? விடியோ வைரல்!

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏஐ எனப்படும்... மேலும் பார்க்க

ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

மாறிவரும் 5ஜி யுகத்தின் வேகத்தில் வேலை செய்யும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிவருகின்றன. ஓடி, ஓடி உழைத்த காலமெல்லாம் மலையேறிவிட்ட இந்த நவீன காலத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது ஒரே இடத்தி... மேலும் பார்க்க

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது, இங்குள்ள பசுமை எரிசக்தி பி... மேலும் பார்க்க