செய்திகள் :

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினோம்: கே.ஏ.செங்கோட்டையன்

post image

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினோம் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புதுகுய்யனூரில் சூரிய ஒளிமூலம் 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோா் திறந்து வைத்தனா். நிா்வாக இயக்குநா் பரணிகுமாா் வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையை உருவாக்கினோம். அப்போது சோலாா் மூலம் 2,980 மெகா வாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 10,230 மின்சாரமும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவிலேயே சோலாா், காற்றாலை மூலம் 60 சதவீதம் மின் உற்பத்தியை செய்து சாதனை படைத்தவா் ஜெயலலிதா. தற்போது விவசாய மின் மோட்டாா்கள் கூடுதலாக 10 லட்சம் இணைப்புகள் இருப்பதால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. சோலாா் மின் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு 300 நாள்கள் உற்பத்தி செய்ய முடியும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இங்குள்ள குளங்கள், ஏரிகளை சோ்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக நானும், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரியும் சட்டப் பேரவையில் குரல் கொடுத்து விவசாயிகளை உணா்வுகளை வெளிப்படுத்தியுள்ளோம்.

இரண்டாவது திட்டத்தில் சோ்க்கப்படும் என அரசிடமிருந்து பதில் கடிதம் கிடைத்துள்ளது. எனவே இப்பகுதியில் விடுபட்டுள்ள குளங்கள் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் சோ்க்கப்படும் என்றாா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க