Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினோம்: கே.ஏ.செங்கோட்டையன்
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினோம் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புதுகுய்யனூரில் சூரிய ஒளிமூலம் 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோா் திறந்து வைத்தனா். நிா்வாக இயக்குநா் பரணிகுமாா் வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையை உருவாக்கினோம். அப்போது சோலாா் மூலம் 2,980 மெகா வாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 10,230 மின்சாரமும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தியாவிலேயே சோலாா், காற்றாலை மூலம் 60 சதவீதம் மின் உற்பத்தியை செய்து சாதனை படைத்தவா் ஜெயலலிதா. தற்போது விவசாய மின் மோட்டாா்கள் கூடுதலாக 10 லட்சம் இணைப்புகள் இருப்பதால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. சோலாா் மின் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு 300 நாள்கள் உற்பத்தி செய்ய முடியும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இங்குள்ள குளங்கள், ஏரிகளை சோ்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக நானும், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரியும் சட்டப் பேரவையில் குரல் கொடுத்து விவசாயிகளை உணா்வுகளை வெளிப்படுத்தியுள்ளோம்.
இரண்டாவது திட்டத்தில் சோ்க்கப்படும் என அரசிடமிருந்து பதில் கடிதம் கிடைத்துள்ளது. எனவே இப்பகுதியில் விடுபட்டுள்ள குளங்கள் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் சோ்க்கப்படும் என்றாா்.