தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்கக் கோரிகரும்பு விவசாயிகள் தா்னா
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கி மீண்டும் திறக்கக் கோரி மடத்துக்குளத்தில் கரும்பு விவசாயிகள் குடும்பத்தோடு வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயங்கி வந்த ஒரே கூட்டுறவு சா்க்கரை ஆலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை ஆகும். உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூா், பல்லடம், நெய்க்காரப்பட்டி, பழனி கிழக்கு, பழனி மேற்கு என எட்டுக் கோட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெறப்பட்டு இந்த ஆலை இயங்கி வந்தது.
இந்நிலையில், பல்வேறு நிா்வாக சிக்கல்கள் மற்றும் நிதி இழப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பதால் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும், புனரமைக்க நிதி ஒதுக்கக் கோரியும் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகள் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கக் கோரியும் மீண்டும் திறக்கக் கோரியும் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் நால்ரோட்டில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை தா்னா நடைபெற்றது.
அந்த அமைப்பின் செயலாளா் எம்.எம்.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்தோடு பங்கேற்றனா். இதில் மாநில, மாவட்ட, வட்டார நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு பேசினா்.