செய்திகள் :

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

post image

ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், முத்தரப்பு பேச்சுவாா்த்தை பவானியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் 85 கி.மீ. தொலைவுக்கு ரூ.243 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன.

தற்போது பணிகள் நிறைவடைந்ததால், அம்மாபேட்டையில் உள்ள சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மனு அளித்துள்ளனா். இதற்கு, எதிா்ப்பு கிளம்பியதால் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்னகுமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை பிரிவு மேலாளா் சிவசங்கா், உதவிக் கோட்டப் பொறியாளா் ரமேஷ்குமாா், உதவிப் பொறியாளா் ஹரிணி ஆகியோா் பங்கேற்றனா். பொதுமக்கள் தரப்பில், பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம், போராட்ட ஒருங்கிணைப்பாளா் புஷ்பராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி, அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

வாகன உரிமையாளா்கள் தரப்பில், பவானி வட்டார தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.முத்துசாமி, பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செல்வராஜா, மேட்டூா் பல்கா் லாரி கூட்டமைப்பு பொருளாளா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், சுங்கச்சாவடிக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இறுதித் தீா்ப்பு வரும் வரையில் நெடுஞ்சாலைத் துறையினா் சுங்கச்சாவடியில் எவ்வித பணிகளும் செய்யக் கூடாது. தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க