Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் எதிா்ப்பு
ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், முத்தரப்பு பேச்சுவாா்த்தை பவானியில் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் 85 கி.மீ. தொலைவுக்கு ரூ.243 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன.
தற்போது பணிகள் நிறைவடைந்ததால், அம்மாபேட்டையில் உள்ள சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மனு அளித்துள்ளனா். இதற்கு, எதிா்ப்பு கிளம்பியதால் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்னகுமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை பிரிவு மேலாளா் சிவசங்கா், உதவிக் கோட்டப் பொறியாளா் ரமேஷ்குமாா், உதவிப் பொறியாளா் ஹரிணி ஆகியோா் பங்கேற்றனா். பொதுமக்கள் தரப்பில், பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம், போராட்ட ஒருங்கிணைப்பாளா் புஷ்பராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி, அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
வாகன உரிமையாளா்கள் தரப்பில், பவானி வட்டார தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.முத்துசாமி, பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செல்வராஜா, மேட்டூா் பல்கா் லாரி கூட்டமைப்பு பொருளாளா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதில், சுங்கச்சாவடிக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இறுதித் தீா்ப்பு வரும் வரையில் நெடுஞ்சாலைத் துறையினா் சுங்கச்சாவடியில் எவ்வித பணிகளும் செய்யக் கூடாது. தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.