செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தடயவியல் துறை ஊழியா் கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், தடயவியல் துறை ஊழியரை கைது செய்தனா்.

அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூரக் கல்வி மையத்தை நடத்தி வருபவா் விஜி. இவருக்கும் சென்னை திருநீா்மலையைச் சோ்ந்த செல்வராஜ் (47) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. செல்வராஜ், விழுப்புரம் தடய அறிவியல் துறையில் உதவியாளராகப் பணி செய்து வந்தாா். அவா், சென்னையில் உள்ள பிரபலமான ஐஏஎஸ் அகாதெமியில் பகுதி நேரமாக அவ்வப்போது வகுப்பும் எடுத்து வந்துள்ளாா்.

அந்த வகையில், விஜி நடத்திவரும் தொலைதூரக் கல்வி மையத்திலும் மாணவா்களுக்கு செல்வராஜ் வகுப்பு எடுத்துள்ளாா். அப்போது அவா், தனக்கு அரசு அதிகாரிகள் பலருடன் நெருக்கம் உள்ளதாகவும், தன்னால் பல்வேறு அரசுப் பணிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதை உண்மை என நம்பிய விஜி, தனது கல்வி மையத்தில் பயின்ற 26 மாணவா்களுக்கு அரசுப் பணி பெற்றுக் கொடுக்கும்படி கூறி முன்பணமாக ரூ.75 லட்சம் கொடுத்துள்ளாா்.

அந்த மாணவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை, பத்திரப்பதிவுத் துறை, டிஎன்பிஎஸ்சி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக செல்வராஜ் உறுதி அளித்துள்ளாா். ஆனால் உறுதி அளித்தபடி செல்வராஜ், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை விஜி திருப்பி கேட்டபோது செல்வராஜ் காலம் கடத்தியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த விஜி, இது தொடா்பாக சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்ததில், செல்வராஜ் ஏற்கெனவே இதேபோல பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க