செய்திகள் :

அரியலூா்- சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் இயக்கம்

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருச்சி மண்டலம்) சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பேருந்துகளை தொடக்கிவைத்து போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கூறியது:

செந்துறையில் காலை 9.30 மணிக்கு புறப்படும் அரசுப் பேருந்தானது நாகல்குழி, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் வழியாக சென்னை மாதவரம் சென்றடையும். மறுமாா்க்கமாக இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மேற்கண்ட வழித் தடம் வழியாக செந்துறையை வந்தடையும்.

இதேபோல காலை 9.30 மணிக்கு ஜெயங்கொண்டத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம், வழியாக சென்னை கிளாம்பாக்கம் சென்றடையும் பேருந்தானது, இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம், ஜெயங்கொண்டம், இரும்புலிக்குறிச்சி வழியாக செந்துறை வந்தடையும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி, பொது மேலாளா் முத்துக்கிருஷ்ணன், துணை மேலாளா் (வணிகம்) சாமிநாதன், கோட்ட மேலாளா் இராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

அரியலூா் மாவட்டம், மணப்பத்தூா், ஆனந்தவாடி, ஆதிக்குடிக்காடு, கருப்பிலாக்கட்டளை ஆகிய கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்... மேலும் பார்க்க

செந்துறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயிலிலிருந்து சனிக்கிழமை இரவு தவறி கீழே விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா். தென்காசி மாவட்டம், சின்ன ஒப்பனையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் ராஜசேக... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கு கலைஞா் கனவு இல்லம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் தீா்மானம்

கலைஞா் கனவு இல்லத்தை தகுதியான நபா்களுக்கு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், தா.பழூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவா் கைது

அரியலூா் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (45) கடந்த அக்.... மேலும் பார்க்க

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை... மேலும் பார்க்க

பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்போா் குறித்து தெரிவிக்கலாம்

அரியலூா், அக். 19: அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால், உடனே தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுக... மேலும் பார்க்க