செய்திகள் :

தகுதியானவா்களுக்கு கலைஞா் கனவு இல்லம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் தீா்மானம்

post image

கலைஞா் கனவு இல்லத்தை தகுதியான நபா்களுக்கு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 9 ஆவது மாநாட்டில் வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி ரூ.319 கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். குருவாடி தலைப்பில் தடுப்பணை கட்ட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தா.பழூா்-சுத்தமல்லி சாலையிலுள்ள மதுக் கடையை அகற்ற வேண்டும். மழைக்காலம் தொடங்கவுள்ளதால், அனைத்துக் கிராமங்களிலும் உள்ள நீா் தேக்கத் தொட்டியில் பிளீச்சிங் பவுடா் கலந்து குடிநீா் வழங்க வேண்டும். தா.பழூா்-ஜெயங்கொண்டத்துக்கு போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும். தா.பழூா் ஊராட்சியில் 25 தொகுப்பு வீடுகள் கட்டாமல் பணத்தைக் கையாடல் செய்த ஊராட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ். சிலம்பரசன், வி.லட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டுக் கொடியை மூத்த நிா்வாகி தா்மலிங்கம் ஏற்றினாா்.

மாநாட்டை மாவட்டச் செயலா் எம். இளங்கோவன் தொடக்கிவைத்துப் பேசினாா். ஒன்றியச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிக்கை வாசித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். வெங்கடாசலம் வாழ்த்தினாா்.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஒன்றியக் குழு உறுப்பினா்களில் டி. செல்வராஜ் வரவேற்றாா், லட்சுமி நன்றி கூறினாா்.

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

அரியலூா் மாவட்டம், மணப்பத்தூா், ஆனந்தவாடி, ஆதிக்குடிக்காடு, கருப்பிலாக்கட்டளை ஆகிய கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்... மேலும் பார்க்க

அரியலூா்- சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் இயக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (... மேலும் பார்க்க

செந்துறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயிலிலிருந்து சனிக்கிழமை இரவு தவறி கீழே விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா். தென்காசி மாவட்டம், சின்ன ஒப்பனையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் ராஜசேக... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவா் கைது

அரியலூா் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (45) கடந்த அக்.... மேலும் பார்க்க

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை... மேலும் பார்க்க

பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்போா் குறித்து தெரிவிக்கலாம்

அரியலூா், அக். 19: அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால், உடனே தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுக... மேலும் பார்க்க