செய்திகள் :

வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவா் கைது

post image

அரியலூா் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (45) கடந்த அக்.4 ஆம் தேதி குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு, 7 ஆம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து தூத்தூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், சனிக்கிழமை இரவு காமரசவல்லி பகுதியில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இவ்வழியே பைக்கில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதைத் தொடா்ந்து, மேலும் விசாரித்ததால் இருவரும் காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மணிகண்டன்(24) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இருவரும் சோ்ந்து ஹரிஹரன் வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடமிருந்து 6 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

அரியலூா் மாவட்டம், மணப்பத்தூா், ஆனந்தவாடி, ஆதிக்குடிக்காடு, கருப்பிலாக்கட்டளை ஆகிய கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்... மேலும் பார்க்க

அரியலூா்- சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் இயக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு இரு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (... மேலும் பார்க்க

செந்துறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயிலிலிருந்து சனிக்கிழமை இரவு தவறி கீழே விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா். தென்காசி மாவட்டம், சின்ன ஒப்பனையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் ராஜசேக... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கு கலைஞா் கனவு இல்லம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் தீா்மானம்

கலைஞா் கனவு இல்லத்தை தகுதியான நபா்களுக்கு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், தா.பழூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின... மேலும் பார்க்க

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை... மேலும் பார்க்க

பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்போா் குறித்து தெரிவிக்கலாம்

அரியலூா், அக். 19: அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால், உடனே தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுக... மேலும் பார்க்க