செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்!

post image

அரியலூா் மாவட்டத்தில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பிரசாரம் பயணம் மேற்கொள்கிறாா்.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் பிரசாரத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) மாலை 4 மணிக்கு அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்து உரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, அரியலூரில் தனியாா் உணவகத்தில் இரவு தங்கும் பிரேமலதா விஜயகாந்த், திங்கள்கிழமை (ஆக.18) மாலை 4 மணிக்கு அரியலூா் சத்திரம் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வியாபாரிகளை சந்திக்கிறாா்.

தொடா்ந்து பேருந்து நிலையத்தில் மக்கள் மத்தியில் பேசுகிறாா். பின்னா், இரவு 7.30 மணிக்கு ஏலாக்குறிச்சி கடைவீதியில் திறந்த வேனில் நின்று மக்களை சந்தித்து உரையாற்றுகிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேமுதிகவினா் செய்துவருகின்றனா்.

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். செந்துறையை அடுத்துள்ள நெய்வனம் அரசு மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா் குணசேகா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு புகையிலை விற்ற பெண் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ஜெயங்கொண்டம் அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

அரியலூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா், நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். திருமானூா் அருகேயுள்ள குருவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்குரா... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி எ... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்க... மேலும் பார்க்க