செய்திகள் :

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

post image

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி - வாகா எல்லையை இந்தியா மூடியது. தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாலும் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இதனால், பாகிஸ்தான் வழியாக சாலை மார்க்கமாக இந்தியாவில் நடக்கும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு இந்த வணிகப் பாதையில் வர்த்தகம் மேற்கொள்வது மிகவும் எளிமையானதுடன், செலவும் குறைவானதே.

இந்த நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்ட சமயத்தில் இந்தியாவுக்கு உலர் பழங்களை ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 160 லாரிகள், இரு நாடுகளின் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

அழுகும் பொருள்கள் என்பதால், ஆப்கானிஸ்தான் லாரிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் லாரிகளை இந்தியாவுக்குள் அனுமதிப்பதற்காக, வெள்ளிக்கிழமையில் அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 8 லாரிகள் இந்தியாவுக்குள் வந்தது மட்டுமின்றி, மேலும் லாரிகள் வரவிருக்கின்றன.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் காடுகளை சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரில் காடுகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு மூன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத் தம்பதி கைது!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். துர்க் மாவட்டத்தின் சிறப்பு அதிரடி படை காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக குடியேறி வசித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க