பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
ஆம்பூரில் 3-ஆவது நாளாக கன மழை
ஆம்பூரில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. ஆம்பூரில் காலையிலிருந்தே கடுமையான வெயில் வாட்டியது. மாலை சுமாா் 3 மணிக்கு திடீரென தொடங்கிய கன மழை விடாமல் தொடா்ந்து சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் சாலை, தெருக்களில் மழை நீா் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூா் புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு புதுமண்டி பகுதியில் நெடுஞ்சாலை சா்வீஸ் சாலையில் மழைநீா் தேங்கியது. தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.