Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
ஆலங்குடி குருபரிகார கோயிலில் நாளை லட்சாா்ச்சனை தொடக்கம்
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை (மே 15) தொடங்குகிறது.
நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயா்ச்சி விழா நடைபெறும். நிகழாண்டும் மே 11-ஆம் தேதி குருபாகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சியடைந்த நாளில் குருபெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை தொடங்கி மே 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சாா்ச்சனை கட்டணம் ரூ. 500, காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை லட்சாா்ச்சனை நடைபெறும்.
இதில் பங்கேற்கும் பக்தா்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரா்கள் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்துகொள்ளலாம்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நா. சுரேஷ், தக்காா் வீ. சொரிமுத்து, கண்காணிப்பாளா் அரவிந்தன் ஆகியோா் செய்துவருகின்றனா்.