செய்திகள் :

'இதுவரை கிடையாது; இனிமேலும் கிடையாது!’ - பாஜகவுடன் `கூட்டணி ஆட்சி’ கேள்விக்கு அதிமுக எம்பி தம்பிதுரை

post image

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று இ.பி.எஸ் தனியாகத் தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது'' என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தம்பிதுரை, " "தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டுமென்றால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்னது காரணமாக கூட்டணி தொடர்பாக அத்வானி மற்றும் வாஜ்பாய் இடம் சென்று கூட்டணி குறித்து நானே பேசினேன்.

தம்பிதுரை
தம்பிதுரை

அதன் அடிப்படையில் தான் அப்போது கூட்டணி அமைக்கப்பட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் திமுக கூட்டணி அமைத்தார்கள். அது பொருந்தும் கூட்டணியா பொருந்தாத கூட்டணியா என ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்.

சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது திமுக கொள்கை. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான முடிவு எடுத்திருக்கிறார். ஊழல் குறித்து அமித்ஷா சொல்லி இருக்கிறார். இது குறித்து ஏதும் வாய் திறக்காமல் திமுக இருக்கிறது.

தமிழக முதல்வர் தைரியம் இருந்தால், ஊழல் குறித்து பேசிய அமித் ஷா மீது வழக்கு தொடர தயாரா? இப்போது எடப்பாடி சரியான கூட்டணி அமைத்து இருக்கிறார். நாங்கள் கொள்கை கூட்டணியில் சிறப்பாக இருப்பவர்கள்.

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தனியாகத்தான் ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததும் கிடையாது. இனிமேல் வரப்போவதும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை
எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை

பாஜகவுடன் கூட்டணிதான், கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒருபோதும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இனியும் கூட்டணி ஆட்சி அமைக்கப்படாது." என்று தம்பிதுரை கூறியிருக்கிறார்.

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க

`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ... மேலும் பார்க்க

'லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை பயன்படுத்தி, 4000 கிலோ ராக்கெட் செலுத்தும் திட்டம்' - இஸ்ரோ தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்... மேலும் பார்க்க