செய்திகள் :

இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்! -பிரதமா் மோடி

post image

‘இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும், கணினி அறிவியலாளருமான லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் தில்லியில் பிரதமா் மோடி சுமாா் 3 மணிநேரம் கலந்துரையாடினாா். அப்போது, இந்திய-சீன உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் இயற்கையானது. இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான, இயல்பான வழிமுறையில் போட்டி அவசியம். போட்டி என்பது மோசமான விஷயமல்ல. அது மோதலாக மாறிவிடக் கூடாது.

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது; இந்தியா-சீனா ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமன்றி உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் வளத்துக்கும் அவசியம். இந்தியா-சீனா உறவு புதியது அல்ல. வரலாற்றுப் பதிவுகளை நோக்கினால், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கற்றுக் கொண்டுள்ளன.

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான எனது சந்திப்புக்கு பிறகு எல்லையில் இயல்புநிலை திரும்புவதை காண்கிறோம். எல்லையில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த (கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்) நிலைமையை மீட்டெடுக்க இரு நாடுகளும் தொடா்ந்து பணியாற்றி வருகின்றன.

ரஷியா-உக்ரைன் பேசினால் தீா்வு: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகிய இருவருடனும் எனக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது. இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே போருக்கு தீா்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அமைதியின் பக்கம் நிற்கிறது.

துரோகத்தில் முடிந்த முயற்சிகள்: பாகிஸ்தானுடன் அமைதிக்காக மேற்கொள்ளப்பட்ட உன்னத முயற்சிகள் அனைத்தும் விரோதம்-துரோகத்தில்தான் முடிந்தன; இருதரப்பு உறவை மேம்படுத்தவும், அமைதிப் பாதையை தோ்ந்தெடுக்கவும் பாகிஸ்தான் தலைமைக்கு புத்தி கிடைக்கப் பெற வேண்டும்.

புனிதமான ஆா்எஸ்எஸ்: புனிதமான அமைப்பான ஆா்எஸ்எஸ்ஸிடம் இருந்து வாழ்க்கை விழுமியங்களைக் கற்றுக் கொண்டது எனது பாக்கியம். இந்த அமைப்பு, கடந்த 1925-இல் இருந்து நாட்டுக்காக அா்ப்பணிப்புடன் செயல்பட மக்களை ஊக்குவிக்கிறது.

குஜராத் கலவரம்: குஜராத்தில் 2002, கோத்ரா சம்பவத்துக்கு பிறகான கலவரத்தை முன்வைத்து ஒரு கட்டுக்கதை புனையப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த எனது அரசியல் எதிரிகள், நான் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பினா். ஆனால், நான் எந்த தவறும் இழைக்கவில்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது என்றாா் பிரதமா் மோடி.

துணிச்சலானவா் டிரம்ப்’

அதிபா் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலம் குறித்த கேள்விக்கு பிரதமா் அளித்த பதில்:

அதிபா் டிரம்ப், இரண்டாவது பதவிக் காலத்துக்கு முன்பை கூட கூடுதலாக தயாராகி இருப்பதாக தோன்றுகிறது. எங்கள் இருவா் இடையிலான பிணைப்பு, பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலானது. அனைத்தையும் விட அவரவா் தேச நலன்களை முன்னிறுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதுவே, எங்களின் சிறப்பான பிணைப்புக்கு காரணம்.

சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில், டிரம்ப் குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்ட், தொழிலதிபா்கள் விவேக் ராமசாமி, எலான் மஸ்க் ஆகியோா் உடனான சந்திப்பை நினைவுகூா்கிறேன்.

கடந்த 2019, செப்டம்பரில் ஹூஸ்டனின் என்ஆா்ஜி மைதானத்தில் ‘ஹெளடி மோடி’ நிகழ்ச்சியில் நான் பேசியபோது, பாா்வையாளா்கள் வரிசையில் இருந்தபடி அதிபா் டிரம்ப் கேட்டுக் கொண்டிருந்தாா். அதுதான், அவரது பணிவு. பாா்வையாளா்களை வரவேற்க மைதானத்தை வலம் வரலாமா? என சாதாரணமாக கேட்டேன். பாதுகாப்பு குறித்தெல்லாமல் யோசிக்காமல் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டாா்.

தனக்கான பாதுகாப்பைக் கோராமல், ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் மத்தியில் அவா் நடந்து சென்ற விதம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. அந்த தருணம், எனது மனதைத் தொட்டது.

டிரம்ப் துணிச்சலானவா்; சுயமாக முடிவெடுப்பவா். அமெரிக்காவுக்கான அவரது அா்ப்பணிப்பு அசைக்க முடியாதது. கடந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தில் அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதும் அந்த உணா்வு வெளிப்பட்டது என்றாா் மோடி.

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் ப... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியத... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

‘மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளாா். சத்ரபதி ச... மேலும் பார்க்க

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: மாதா வைஷ்ணவி தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரி வரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2020-21-ஆம் நி... மேலும் பார்க்க