செய்திகள் :

இன்போசிஸ் துணை நிறுவனர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு! - விவரம் என்ன?

post image
இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

போவி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் சன்னா துர்கப்பா. இவர் 2014-ம் ஆண்டு இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அப்போது இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன், தன் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி பணியிலிருந்து நீக்கியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் துர்கப்பா. மேலும், சாதிய ரீதியில் அவதூறுகள், அச்சுறுத்தல்களுக்கும் தான் ஆளாகியிருப்பதாக புகாரில் குறிப்பிட்டு பெங்களூரு சதாசிவா நகர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

க்ரிஸ் கோபாலகிருஷ்ணன்

அந்த வழக்கில் இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மட்டுமன்றி இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 17பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சமீபமாக தொழில்நுட்பத் துறையில் இப்படியான சாதிய, இன, மத வேறுபாடுகள் பார்க்கப்படுவது அவ்வப்போது புகார்களாக, செய்திகளாக வந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில், பிரபல முகமாக இருக்கும் இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.

deepseek: 'நிதி நிறுவனம் டு ஏ.ஐ' - யார் இந்த டீப் சீக் நிறுவனர் லியாங் வென்ஃபெங்?!

டீப் சீக் சாட்பாட் - ஏ.ஐ உலகத்தின் புதிய வரவு. 'எப்போது என்ன சொல்வார்... செய்வார்' என்று உலக நாடுகளை ஜெர்க்கில் வைத்திருக்கும் ட்ரம்பிற்கே இந்த வரவு ஒரு ஜெர்க்கைத் தந்துள்ளது.கடந்த சில நாட்களாக, டீப் ... மேலும் பார்க்க

TRAI: ரீசார்ஜ் செய்யாமல் 90 நாள் சிம் ஆக்டிவாக இருக்குமா... வைரல் செய்தியின் உண்மை என்ன?

இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் நபர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது செகண்டரி சிம் கார்டை ஆக்ட்டிவாக வைத்திருப்பதற்காகவே ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதே. அதிலும், பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமி... மேலும் பார்க்க

China: Man vs Robo... மாரத்தானில் களமிறங்கும் ரோபோட்கள்; சீனா போடும் திட்டத்தின் பின்னணி என்ன?

தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் நேரடியாகப் பந்தயம் நடத்துகிறது சீனா.தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரை மாரத்தானில் 12 ரோபோட்கள் வரை பங்குபெறும்... மேலும் பார்க்க

AI: 'பெரிய நிறுவனங்களில் இன்ஜினீயர்களுக்கு மாற்றாக ஏ.ஐ...' - என்ன சொல்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்?!

2025-ம் ஆண்டு இறுதிக்குள் மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் மிட் லெவல் இன்ஜினீயர்களின் பணியானது AI வசம் ஒப்படைக்கப்படும் என்று மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.ஏ.ஐ குறித்த பா... மேலும் பார்க்க

Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - சுவாரஸ்ய பிண்ணனி

அமெரிக்கா - சீனாவிற்கு இடையே உள்ள நேரடிப்போர், மறைமுகப்போர் அனைத்தும் உலகம் அறிந்ததே. ஆனால், 'ஆடு பகை குட்டி உறவு' என்ற பழமொழிக்கேற்ப, அமெரிக்க மக்கள் சமீப காலமாக சீன மொழியான மாண்டரீனை கற்றுக்கொள்ள அத... மேலும் பார்க்க

``ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன் கண்டுபிடித்தார்; ஆப்பிள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறது" - மார்க் ஜுக்கர்பெர்க்

ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் விளங்குகிறது. மற்ற ஸ்மாட்போன்களைப் போல ஆன்ட்ராய்டு இயங்குதளம் அல்லாது iOS மூலம் ஐபோன்கள் இயங்குகின்றன. இன்று ஆப்பிள் நிறுவ... மேலும் பார்க்க