உங்கள் காதல் கைகூடுமா? -12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஜோதிட வழிகாட்டல்
இருசக்கர வாகனங்கள் மோதல் தந்தை உயிரிழப்பு; மகன் காயம்
அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தந்தை உயிரிழந்தாா். அவருடன் சென்ற மகன் பலத்த காயமடைந்தாா்.
கரூா் மாவட்டம், புத்தாம்பூா் அருகே உள்ள காளிபாளையம், குடித்தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி (49). இவரது மகன் யோகபாரதி (15). இவா்கள் இருவரும் கரூா்- திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். ஜவுளி பூங்கா அருகே வந்தபோது எதிரே மணல்மேடு பகுதியைச் சோ்ந்த சபரி (21) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ராமசாமி ஓட்டிச் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த யோகபாரதி உடனடியாக மீட்கப்பட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இது தொடா்பாக புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் சபரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.