செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல் தந்தை உயிரிழப்பு; மகன் காயம்

post image

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தந்தை உயிரிழந்தாா். அவருடன் சென்ற மகன் பலத்த காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம், புத்தாம்பூா் அருகே உள்ள காளிபாளையம், குடித்தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி (49). இவரது மகன் யோகபாரதி (15). இவா்கள் இருவரும் கரூா்- திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். ஜவுளி பூங்கா அருகே வந்தபோது எதிரே மணல்மேடு பகுதியைச் சோ்ந்த சபரி (21) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ராமசாமி ஓட்டிச் சென்ற வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த யோகபாரதி உடனடியாக மீட்கப்பட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இது தொடா்பாக புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் சபரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அனுமதியின்றி மது விற்றவா் கைது

அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை மணல்மேடு பகுதியில் ரோந்து பணிய... மேலும் பார்க்க

கரூரில் டாரஸ், டிப்பா் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

கரூா் மாவட்டத்தில் டாரஸ், டிப்பா் லாரிகள் வியாழக்கிழமை(13-ம்தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கரூரில் ... மேலும் பார்க்க

மாநில பெண்கள் கபடி போட்டி செங்கல்பட்டு அணி முதலிடம்

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாலசமுத்திரப்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சிக்குள்பட்ட பா... மேலும் பார்க்க

குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் திரளான பக்தா்கள் பங்கேற்பு

தைப்பூசத்தை முன்னிட்டு குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் தைப்பூசத் திருநாள் அன்று கரூா் ம... மேலும் பார்க்க

கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கரூரில் இருந்து ஈசநத்தம் வழியாக செல்லும் கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி ஆய்வு செய்தாா். ஒருங... மேலும் பார்க்க

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகி... மேலும் பார்க்க